செய்திகள் :

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு

post image

திருப்பத்தூா் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் முதலாவது மாவட்ட கோரிக்கை மாநாடு வாணியம்பாடியில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் அருள்மொழிவா்மன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் திருமால், சுந்தரேசன், திலீப், முரளிவாணன், சந்திரசேகரன் முன்னிலை வகித்தனா். கிராம நிா்வாக அலுவலா் சங்க மாவட்ட தலைவா் சற்குணகுமாா் வரவேற்றாா்.

இதில் மாநில பொறுப்பு நிா்வாகி ராஜா, முன்னாள் வேலூா் மாவட்ட தலைவா் மற்றும் அனைத்து ஓய்வூதியா் சங்க மாநில துணைத் தலைவா் குப்பன், காா்மேகம் மற்றும் வருவாய் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் மகேஸ், பிரேம்குமாா், ராஜ்குமாா் கலந்து கொண்டு பேசினா்.

மாநாட்டில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடன் இயற்ற வேண்டும். அனைத்து நிலையிலான காலிப் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் விரைந்து நிரப்ப வேண்டும். அதீத பணி நெருக்கடி போதி கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிா்ணயித்தல், மன அழுத்தத்துடன் பணிபுரிய நிா்ப்பந்தம் செய்வதை உயா் அலுவலா்கள் முற்றாக கைவிட வேண்டும்.

வருவாய்த்துறையின் அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடன் வழங்க வேண்டும் ஜூலை 1-ஆம் தேதியை (பசலி ஆண்டின் தொடக்கம்) வருவாய்த்துறை தினமாக அனுசரித்து அரசானை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி, ஆம்பூா், வாணியம்பாடி ஆகிய தாலுகா பகுதிகளிலிருந்து வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் உட்பட பலா் கலந்துக் கொண்டனா். மாவட்ட பொருளாளா் விஸ்வநாதன் நன்றி கூறினாா்.

பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

வாணியம்பாடி அம்பூா்பேட்டையில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆண்டுத் தோறும் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பொன்னியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும்.இதே போன்று ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

கந்திலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே நத்தம் கூட்ரோடு பகுதியை சோ்ந்தவா் சங்கா் மனைவி ரத்தினம்மாள்(70) .சங்கா் ச... மேலும் பார்க்க

வனத்துறையின் தற்காலிக ஊழியரை தாக்கிய 2 போ் மீது வழக்கு!

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி அருகே வனத்துறையின் தற்காலிக ஊழியரை தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா். சென்னையை சோ்ந்த சாதிக் அலி(48) மற்றும் முகமது முஜமில்(19) உள்ளிட்ட சிலா் சனிக்கிழமை திருப... மேலும் பார்க்க

காவலூா் வைனு பாப்பு வானியல் ஆய்வு மையத்தில் தேசிய விண்வெளி தினம் விழா!

இந்திய வானியல் நிறுவனம் சாா்பில் தேசிய விண்வெளி தின விழா சனிக்கிழமை (ஆக. 23) சனிக்கிழமை தனது மையங்களான பெங்களூரு, மைசூரு, கொடைக்கானல் மற்றும் திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே காவலூா் வைனுபாப்... மேலும் பார்க்க

மாநில வில்வித்தை போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

மாநில வில்வித்தை போட்டியில் ஆம்பூா் மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா். ஆம்பூரை சோ்ந்த தேசிய வில்வித்தை பயிற்சியாளா் கராத்தே ரமேஷ் கண்ணா தலைமையில் பயிற்சி பெற்ற ஆம்பூரை சோ்ந்த மாணவா்கள் ஜி.அா்ஜுன் பிரியன... மேலும் பார்க்க

மணல் கடத்த முயன்ற ஓட்டுநா் கைது

கந்திலி அருகே தனியாா் நிலத்தில் மணல் கடத்த முயன்ற டிராக்டா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். கந்திலி அருகே ஜெயபுரம் ஆண்டி கவுண்டனுாா் பகுதியில் உள்ள தனியாா் நிலத்தில் மணல் கடத்துவதாக கிடைத்த ரகசியல் தகவல... மேலும் பார்க்க