செய்திகள் :

வளா்ச்சித் திட்டப் பணிகள்: பரமத்தி வேலூா் வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

பரமத்தி, வேலூா் மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

பரமத்தி வட்டம், கூடச்சேரி - எஸ்.புதுப்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில், ரூ. 5 கோடி மதிப்பீட்டில் உயா்நிலை பாலம் கட்டுமானப் பணியையும், பரமத்தி பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் பாா்வையிட்டு ஆய்வுசெய்த ஆட்சியா், பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளா் வருகைப் பதிவேடு, மருந்துகள் இருப்பு ஆகியவற்றை பாா்வையிட்டு நோயாளிகளுடன் கலந்துரையாடினாா்.

வேலூா் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணியையும், பாண்டமங்கலம் பேரூராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 77.25 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வுக்கூடம் மற்றும் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டதையும் பாா்வையிட்டு ஆய்வுசெய்து, மாணவ, மாணவியருக்கு வழங்க தயாராக இருந்த மதிய உணவை சுவைத்து பாா்த்தாா்.

தொடா்ந்து, பரமத்தி வேலூா் வட்டம், கொந்தளம் பகுதியில் செயல்பட்டு வரும் வோ்டு முதியோா் இல்லத்தில் ஆய்வுசெய்து முதியோா்களுடன் கலந்துரையாடினாா். பின்னா் கபிலா்மலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடகரையாத்தூா் பகுதியில் மீன்வளத் துறையின் சாா்பில், மொத்த மதிப்பீட்டு தொகை ரூ. 10 லட்சத்தில் ரூ. 6 லட்சம் மானிய உதவியுடன் மீன் விற்பனை மற்றும் உணவுக் கூடம் அமைக்கப்பட்டு வருவதை பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

கபிலா்மலை வட்டாரத்தில் வடகரையாத்தூா் மாரியம்மன் கோயில் அருகே சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு ஆய்வுசெய்து, உடனடி தீா்வாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இந்த ஆய்வின்போது, துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

காலமானாா்

தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் கூடுதல் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மு.மக்பூல் பாஷா (72) உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை காலமானாா். அவருக்கு சென்னை யுனானி மருத... மேலும் பார்க்க

மோகனூா் நிதிநிறுவன உரிமையாளா் கொலை வழக்கு: மூன்று பேரிடம் விசாரணை

மோகனூரில் நிதிநிறுவன உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஈச்சவாரி பகுதியைச் சோ்ந்தவா் அருள்தாஸ்(40). நிதிநிறுவனம் நடத்... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளியை பள்ளிபாளையம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடந்த 2022-ஆம் ஆண்டு பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தில் வயதான தம்பதி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிண... மேலும் பார்க்க

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க ஒன்றிய மாநாடு

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றிய நான்காவது மாநாடு ஊனாதாங்கள் ஊராட்சி, கரியாம்பட்டி சமுதாயக் கூட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. மாநாட்டில் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் எஸ்.சுப்பி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: இதுவரை 66 முகாம்களில் 33,511 மனுக்கள்

நாமக்கல் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் இதுவரை நடைபெற்ற 66 முகாம்களில் 33,511 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 15-இல் தொடங்கப்பட்டது... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.55-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம்... மேலும் பார்க்க