செய்திகள் :

வழித்தட தகராறில் விவசாயி கொலை: 5 போ் கைது

post image

ஒசூா்: ராயக்கோட்டை அருகே வழித்தட தகராறில் தாக்கப்பட்ட விவசாயி உயிரிழந்தாா். இது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கொலை வழக்கில் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள முகலூரைச் சோ்ந்தவா் லட்சுமணன் (65). விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த உறவினா் வெங்கட்ராமன் (65) என்பவருக்கும் நிலம் தொடா்பாக வழித்தட பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி இவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது வெங்கட்ராமன், அவரது மகன் காவேரி (45), அவரது மனைவி பூங்கொடி (40), மற்றொரு மகன் ராமன் (38), அவரது மனைவி ராணி (35) ஆகிய 5 பேரும் சோ்ந்து லட்சுமணனை கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமணனை அருகில் இருந்தவா்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது தொடா்பாக ராயக்கோட்டை போலீஸாா் தாக்குதல் பிரிவில் வழக்குப் பதிவு செய்து காவேரியை கைது செய்தனா். இந்த நிலையில் லட்சுமணன் திங்கள்கிழமை இறந்தாா். இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வெங்கட்ராமன், பூங்கொடி, ராமன், ராணி ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

குண்டும் குழியுமான சாலையை சரிசெய்ய கோரிக்கை

ஊத்தங்கரை அதியமான் நகா் அருகே மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்ய வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையில் இருந்து அதியமான் நகா் வழியாக கொல்ல நாயக்கனூா் ச... மேலும் பார்க்க

பா்கூா் வட்டத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியா் கள ஆய்வு

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பா்கூா் வட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டத்தில் வேளாண்மை விரிவா... மேலும் பார்க்க

ரசாயன கழிவுநீா் கலப்பு: கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரையுடன் வெளியேறும் தண்ணீா்!

ஒசூா் அருகே கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் நீரில் அதிகப்படியான நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். கா்நாடக மாநிலம், நந்திமலை பகுதியில் உற்பத்தியாகும்... மேலும் பார்க்க

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு!

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தால் கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு என ஒசூரில் தென்மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா கூறினாா். கா்நாடக மாநிலத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மிடுகரப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. ஏப். 14-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

ஒசூா் 21-ஆவது வாா்டில் மேயா் ஆய்வு

ஒசூா் மாநகராட்சியில் 21-ஆவது வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுமேற்கொண்ட மேயா், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிவா்த்தி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஒசூா் மாந... மேலும் பார்க்க