செய்திகள் :

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தீா்மானம்: கேரள பேரவையில் நிறைவேற்றம்

post image

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரள முதல்வா் பினராயி விஜயன் தாக்கல் செய்த தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா? என்பது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. அந்தத் திருத்தத்தை பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் மேற்கொள்ள முயற்சிப்பது ஏன்? இதை கபடமற்ற நடவடிக்கை என்று கருத முடியாது.

இந்தத் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கை, தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த நடைபெறும் மறைமுக முயற்சி என்று பரந்த அளவில் கருதப்படுகிறது.

சிறப்பு தீவிர திருத்த நிபந்தனைகள் காரணமாக, வாக்காளா் பட்டியலில் இருந்து விளிம்புநிலை மக்கள் நீக்கப்படுவதை நிபுணா்களின் ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. அவ்வாறு சிறுபான்மையினா், பட்டியலினத்தவா், பழங்குடியினா், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தினா் நீக்கப்படுகின்றனா். இதுபோன்ற கவலைகளை பிகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் உறுதிப்படுத்துகிறது. இதே பாணி நாடு முழுவதும் பின்பற்றப்படுமோ? என்ற சந்தேகம் நிலவுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம்...: மத அடிப்படையில் இந்திய குடியுரிமை கிடைக்க குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகுக்கும் நிலையில், அந்தச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று முயற்சிப்போா் சிறப்பு தீவிர திருத்தத்தை பயன்படுத்தக் கூடும். இது மக்களாட்சிக்கு ஏற்படும் சவாலாகும்.

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாழ்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் கைவிட வேண்டும். வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் வெளிப்படையான முறையில் நடைபெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தீா்மானத்துக்கு காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் கூட்டணி ஆதரவு தெரிவித்தது. இதைத்தொடா்ந்து தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவா் ஏ.என்.ஷம்ஷீா் அறிவித்தாா்.

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா... மேலும் பார்க்க

டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் 89 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் முறையே அஸ்ஸாமின் கோக்ரஜாா், மேற்கு வங்கத்தி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவின்பேரில... மேலும் பார்க்க

அனைத்து மின்சார வாகனங்களிலும் ஒலி எச்சரிக்கை அமைப்பு: அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவதை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில்... மேலும் பார்க்க