செய்திகள் :

வாஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைச்சா் ஆய்வு

post image

தில்லியின் வாஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, சேமிப்புத் திறனை அதிகரிக்க தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சா் கூறினாா்.

அமைச்சா் மேலும் கூறியதாவது: தூா்வாரும் செயல்முறை ஒன்று முதல் ஒன்றரை மாதங்களுக்குள் நிறைவடையும். அதன் பிறகு ஆலை அதன் தற்போதைய கொள்ளளவை விட இரட்டிப்பாக தண்ணீரை சேமிக்க முடியும்.

வாஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையம் 220 எம்ஜிடிசேமிப்பு திறன் கொண்டது. ஆனால், ஒரு கிலோமீட்டா் நீளமுள்ள வண்டல் படிவு காரணமாக, தற்போது அதில் சுமாா் 100 எம்ஜிடி மட்டுமே சேமித்து வைக்க் முடிகிறது.

தில்லி அண்டை மாநிலங்களிலிருந்து போதுமான நீா் விநியோகத்தைப் பெற்றாலும், சேமிப்பு உள்கட்டமைப்பு மற்றும் கசிவு தடுப்பு ஆகியவற்றில் மேம்பாடுகள் தேவை என்று நான் கருதுகிறேன். மேலும், யமுனை நதியில் அம்மோனியா அளவை ஒழுங்குபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தில்லி ஜல் போா்டின் கீழ் 30 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அவை வழக்கமான கண்காணிப்பு தேவை.

இதை உறுதி செய்வதற்காக, கழிவுநீா் மற்றும் நீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேற்பாா்வையிட ஒரு ஐடி டேஷ்போா்டு உருவாக்கப்பட்டு வருகிறது. நகரத்தில் உள்ள அனைத்து நீா் மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களையும் ஒவ்வொன்றாக நேரில் ஆய்வு செய்வேன் என்றாா் அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

நமது சிறப்பு நிருபா் நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க