செய்திகள் :

வாட்ஸ்ஆப்பில் இன்ஸ்டாகிராம்! புதிய வசதி அறிமுகம்!

post image

வாட்ஸ்ஆப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் கணக்கை இணைக்கும் ஒரு புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், வாட்ஸ்ஆப்பில் மேலும் ஒரு புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.

ஒரு சமூக வலைத்தளக்கணக்கில் மற்ற சமூக வலைத்தளங்களின் கணக்கின் விவரங்களை இணைக்கலாம். உதாரணமாக பேஸ்புக்கில் மற்ற சமூக வலைத்தளங்களின் விவரங்களை சேர்க்க முடியும். இதனால் ஒருவரின் பேஸ்புக் விவரங்களைப் பார்ப்பவர்கள், அவரின் எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட கணக்குகளைத் தெரிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில், வாட்ஸ்ஆப்பில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமின் ஐடி-யை இணைக்கும் வகையில் புதிய வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

தற்போது வாட்ஸ்ஆப்பில் ஒருவரின் பெயர், மொபைல் எண் விவரங்கள் மட்டுமே உள்ளன.

இதையும் படிக்க | உங்கள் காதலைக் கொண்டாட 10 சிறந்த மலைப்பிரதேசங்கள்!

வாட்ஸ்ஆப்பில் இன்ஸ்டாகிராமின் கணக்கை இணைக்கும் இந்த வசதி தற்போது பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐஓஎஸ் பயனர்களுக்கும் பெற்று வருகின்றனர். விரைவில் மற்ற பயனர்களுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த புதிய அம்சத்தால் ஒருவரின் வாட்ஸ்ஆப் நம்பர் இருந்தாலே அவரின் இன்ஸ்டா கணக்கைத் தெரிந்துகொள்ள முடியும்.

விரைவில் மற்ற சமூக வலைத்தளங்களின் கணக்குகளும் வாட்ஸ்ஆப்பில் இணைக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்றையும் மெட்டா நிறுவனம் நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்... மேலும் பார்க்க

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.அதனை முறையாக பராமரிக்கவும் வே... மேலும் பார்க்க