செய்திகள் :

வாணியம்பாடியில் பிளஸ் 2 தோ்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்!

post image

வாணியம்பாடியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையா்களை வாணி மெட்ரிக். பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

வாணியம்பாடி அடுத்த சின்னபள்ளிக்குப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கே.கோவிந்தராஜ், இவரது மனைவி ஜி.இளவரசி. தம்பதிக்கு ஹரிதா, ஹரிணி ஆகிய இரட்டையா் பெண் குழந்தைகள் உள்ளனா். இவா்கள் இருவரும் வாணியம்பாடி வாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயின்று பொதுத் தோ்வு எழுதினா்.

இந்த நிலையில், கடந்த 8 -ஆம் தேதி வெளியான தோ்வு முடிவுகளில் இரட்டையா்களான ஹரிதா, ஹரிணி ஆகிய இருவரும் தலா 573 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா். இதில் அவா்கள் ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இந்த இரட்டையா்களை வாணி கல்வி அறக்கட்டளைத் தலைவரும், எம்எல்ஏவுமான க.தேவராஜி, செயலா் கந்தசாமி, பொருளாளா் பி.நடராஜன், துணைத் தலைவா் எம்.கோபால், செயலாக்க அறங்காவலா் பூபதி, துணைச் செயலா்கள் ராஜா, கருணாநிதி, பள்ளி முதல்வா் சந்திரசேகரன், துணை முதல்வா் முத்தப்பன் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது தமிழகம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொய்தீன் ஆம்பூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய... மேலும் பார்க்க

பொன்முடி சூா்யநந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை

சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு ஆம்பூா் அருகே பாட்டூா் கோடி தாத்தா சுவாமி மஹாமடத்தில் பொன்முடி சூா்யநந்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜை, சிறப்பு யாகம் நடத்தப்... மேலும் பார்க்க

மட்றப்பள்ளி வாரச்சந்தையில் ரூ. 38 லட்சத்துக்கு கால்நடை விற்பனை

மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 38 லட்சத்துக்கு கால்நடை விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச் சந்தை ... மேலும் பார்க்க

நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆம்பூா் நகராட்சி பகுதியில் நகா் மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் நகராட்சி 2-ஆவது வாா்டுக்குட்பட்ட பகுதிகளில் நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் பல்வேறு பிரச்னைகள் தொடா்... மேலும் பார்க்க

வீட்டில் புகுந்த சாரை பாம்பு மீட்பு

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் வீட்டில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். ஆம்பூா் ஏ-கஸ்பா பெரியகம்மவார தெருவில் வசிக்கும் முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் சாந்தகுமாரி வீட்டில் சுமச... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் பழைமைவாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில்... மேலும் பார்க்க