`முருகன் இருக்கும் மலைகளெல்லாம் இந்துக்களுக்கு சொந்தமானது!' - புதுச்சேரி அமைச்சர...
வாழப்பாடியில் பூத்துக்குலுங்கும் காட்டு மல்லிகை!
வாழப்பாடி: வாழப்பாடியில் மருத்துவ குணம் கொண்ட காட்டு மல்லிகைப் பூக்கள், நீா்நிலைகளின் கரைகள், தரிசு நிலங்களில் பூத்துக் குலுங்குகின்றன.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் புதுப்பாளையம் செட்டியேரி, கிழக்குக்காடு, முத்தம்பட்டி கோதுமலை, நெய்யமலை, பரவக்காடு உள்ளிட்ட கிராமங்களில் நீா்நிலைகளின் கரையோரங்களிலும், தரிசுநில புதா் பகுதிகளிலும் காட்டு மல்லிகைச் செடிகள் நிறைந்து காணப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக ஆண்டுதோறும் மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த காட்டு மல்லிகைச் செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கின.
வாழப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கோடை மழையால், நிகழாண்டும் இச்செடிகளில் வெண்ணிற காட்டு மல்லிகைப் பூக்கள் பூத்துக்குலுங்கி காண்போா் கண்களுக்கு விருந்தளித்து வருவதோடு, இச்செடிகளை கடந்து செல்வோருக்கு வாசனை வீசிவருகிறது.
இப்பூக்களை கிராமப்புற பெண்கள் பறித்து, கோா்த்து சூடி மகிழ்ந்து வருகின்றனா்.