செய்திகள் :

வாழ்த்துங்களேன்!

post image

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்!

அன்பார்ந்த வாசகர்களே!

உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன.

பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, உங்களின் மொபைல் போன் மூலம் பதிவு செய்யுங்கள். அதற்கு, இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்பு மிக்க ஆலயங் களில் சமர்ப்பிக்கப்படும்.

18.2.25 முதல் 3.3.25 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 10.2.25

மேலப்பெரும்பள்ளம் ஸ்ரீவலம்புரநாதர்

மேலப்பெரும்பள்ளம் ஸ்ரீவலம்புரநாதர் ஆலயத்தில்..!

18.2.25 முதல் 3.3.25 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்த னைகள், மயிலாடுதுறை மேலப்பெரும்பள்ளம் எனும் திருவலம்புரம் ஸ்ரீவடுவகிர்கண்ணி அம்மை சமேத ஸ்ரீவலம்புரநாதர்ஆலயத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

திருமால் தவம் செய்து பதுமமும்; சங்கமும் பெற்ற தலம் இது. நந்தியும் காமதேனுவும் ஒருசேர வலம்புரி மலர்களைக் கொண்டு பூஜித்த தலம். ஏரண்ட மகரிஷிக்கு இறைவன் அருளிய தலம். ஸ்த்ரீ சாபநிவர்த்தி தலம். பட்டினத்தார் கஞ்சி ஏற்று பசி போக்கிக் கொண்ட தலம். பரணி நட்சத்திரத்தவர்கள் தரிசிக்க வேண்டிய தலம். இங்கு சென்று வழிபட்டால் நீண்ட ஆயுள், நீங்காத செல்வம், நிலைத்த ஆரோக்கியம் என அனைத்தும் கைகூடும்.

அற்புதமான இந்தத் தலத்தில்தான்... வாசகர்கள் சகல சௌபாக்கியங்களைப் பெற்று வாழவும், அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!

800 ஆண்டுகள் பழமையான கோயிலில் தூய்மைப்பணி; 62 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய தெப்பக்குளம் | Photo Album

குளத்தில் நீர் நிரம்பியதுகதலி நரசிங்க பெருமாள் கோயில் தெப்பக்குளம்குளத்தில் நீர் நிரம்பியதுகுளத்தில் நீர் நிரம்பியதுகதலி நரசிங்க பெருமாள் கோயில் தெப்பக்குளம்கதலி நரசிங்க பெருமாள் கோயில் தெப்பக்குளம்கத... மேலும் பார்க்க

`பகை விலக்கி பலம் சேர்க்கும்' தைப்பூச மகாசங்கல்ப பூஜை தோரணமலையில் 7 அபூர்வ பலன்கள்; சங்கல்பியுங்கள்

பகை விலக்கி பலம் சேர்க்கும் தைப்பூச மகாசங்கல்ப பூஜை தோரணமலையில்! 7 அபூர்வ பலன்கள்! சங்கல்பியுங்கள்! வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப ப... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள்; பழமை மாறாமல் பொருத்தப்பட்ட 9 கலசங்கள்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களி... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: 2 மாதத்திற்குப் பிறகு ஆசி வழங்கிய தெய்வானை யானை… மகிழ்ச்சியில் பக்தர்கள்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமானது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நா... மேலும் பார்க்க

தொன்மையான கட்டடக் கலை கோயிலில் முருகப்பாஸ் சோழ மண்டலம் - என்ன பணிகள் செய்யப் போகிறார்கள்?

காஞ்சிபுரத்தில் உள்ள மிக தொன்மை வாய்ந்த கைலாச நாதர் திருக்கோயிலில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளது முருகப்பா குழுமத்தின் ... மேலும் பார்க்க

``1000 வெள்ளத்தாலும் அசைக்க முடியாத முருகன் கோவில்...'' - வியக்க வைக்கும் தொழில் நுட்பங்கள்..!

திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது புகழ் பெற்ற குறுக்குத்துறை முருகன் கோயில். ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் இந்தக் கோயில் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். வெள்ளப்பெருக்கு வடிந்த உடன்,... மேலும் பார்க்க