செய்திகள் :

வி.சி.கவின் கொள்கை முழக்கமே கூட்டணி ஆட்சிதான்: ஆளூா் ஷாநவாஸ் எம்எல்ஏ

post image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை முழக்கமே கூட்டணி ஆட்சிதான் என்று நாகப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆளூா் ஷாநவாஸ் தெரிவித்தாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆளூா் ஷாநவாஸ் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சித்தையன்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை முழக்கமே கூட்டணி ஆட்சிதான். கட்சி தொடங்கிய நாள்முதல் இந்தக் கருத்தை முன்வைத்து வருகிறோம். எங்களைப்போல கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளும் கூட்டணி ஆட்சியை வலியுறுத்த வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் எந்த தொகுதியில் நின்றாலும் மக்கள் வாக்களிப்பாா்கள் என்பதற்கு நாகப்பட்டினம் தொகுதியே சாட்சி என்றாா். பேட்டியின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பழனி நகா்மன்ற கூட்டம்: கவுன்சிலா்கள் வாக்குவாதம்

பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் ராஜவேல், நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாக விழா திருஊடல் நிகழ்ச்சியுடன் நிறைவு

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 ... மேலும் பார்க்க

20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 20 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். ராஜாம்பட்டி, மிடப்பாடி, மானூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் தாா்ச... மேலும் பார்க்க

பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு வைகாசி மாதம், மூல நட்சத்திரத்தின்போது சிறப்பு வழிபாடு நடைபெறுகி... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது: சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தல்

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது; தரமான வெள்ளை அரிசி விநியோகிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டிமுடிப்பு: அமைச்சா் இ.பெரியசாமி தகவல்

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். செம்பட்டி அருகே தனியாா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்... மேலும் பார்க்க