செய்திகள் :

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 2

post image

1. சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.

(A) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது

(B) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது

(C) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது

(D) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது

(E) விடை தெரியவில்லை

2. குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.

(A) சார்பு

(B) மருந்து

(C) கஃசு

(D) பசு

(E) விடை தெரியவில்லை

3. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

(A) மோனை

(B) எதுகை

(C) இசைவு

(D) இயைபு

(E) விடை தெரியவில்லை

4. பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்

(A) ஆழ்வார்கள்

(B) சித்தர்கள்

(C) நாயன்மார்கள்

(D) புலவர்கள்

(E) விடை தெரியவில்லை

5. 'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு

(A) தாலாட்டுப்பாட்டு

(B) கும்மிப் பாட்டு

(C) பள்ளுப்பாட்டு

(D) வில்லுப் பாட்டு

(E) விடை தெரியவில்லை

6. 'வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்

(A) நல்லாதனார்

(B) ஒட்டக்கூத்தர்

(C) காளமேகப் புலவர்

(D) குமரகுருபரர்

(E) விடை தெரியவில்லை

7. 'மரமும் பழைய குடையும்' - ஆசிரியர்

(A) பாரதிதாசன்

(B) அழகிய சொக்கநாதப் புலவர்

(C) காளமேகப்புலவர்

(D) புதுமைப்பித்தன்

(E) விடை தெரியவில்லை

8. "உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்" என்று கூறியவர் யார்?

(A) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்

(B) உ.வே. சாமிநாதனார்

(C) திரு.வி. கலியாண சுந்தரனார்

(D)ஆறுமுக நாவலர்

(E) விடை தெரியவில்லை

9. சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.

இளங்கோவடிகள்

(a) சேர மரபைச் சார்ந்தவர்

(b)சிலப்பதிகாரத்தை இயற்றியவர்

(c) “அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்குரியவர்

(d) "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று கூறியவர்

(A) அனைத்தும் சரி

(B) (a), (b) சரி

(C) (a), (c), (d) சரி

(D) அனைத்தும் தவறு

(E) விடை தெரியவில்லை

10. கூற்று 1 : சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.

கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30. காதைகளைக் கொண்டுள்ளன.

(A) கூற்று 1 மட்டும் சரி

(B) கூற்று 2 மட்டும் சரி

(C) கூற்று இரண்டும் சரி

(D) கூற்று இரண்டும் தவறு

(E) விடை தெரியவில்லை

11. கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.

(A) அண்ணனோடு போ

(B) கூடு கட்டு

(C) தமிழ்ப்படி

(D) அரசு ஆணை பிறப்பித்தது

(E) விடை தெரியவில்லை

12. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

ஐந்து மாடுகள் மேய்ந்தன.

(A) எத்தனை மாடுகள் மேய்ந்தன?

(B) எவ்வளவு மாடுகள் மேய்ந்தன?

(C) மாடுகள் மேய்ந்தனவா?

(D) ஐந்து மாடுகள் என்ன செய்கின்றன?

(E) விடை தெரியவில்லை

13. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க. இங்கு நகரப் பேருந்து நிற்கும்

(A) நகரப்பேருந்து ஏன் நிற்கும்?

(B) நகரப்பேருந்து எப்போது நிற்கும்?

(C) இங்கு நகரப்பேருந்து நிற்குமா?

(D) இங்கு நகரப்பேருந்து வருமா?

(E) விடை தெரியவில்லை

14. சரியான தொடரைக் கண்டறிக.

(A) உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ள வரையிலும்

(B) தமிழ்மொழி உலகம் வாழட்டும் உள்ளவரையிலும்

(C) தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்

(D) உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும் வாழட்டும்

(E) விடை தெரியவில்லை

15. சரியான தொடரைக் கண்டறிக.

(A) தம்பி படி சங்கத்தமிழ் நூலை என்று கூறினார் கவிஞர்

(B) என்று கவிஞர் கூறினார் சங்கத்தமிழ் நூலைப் படி

(C) நூலைப்படி கவிஞர் சங்கத்தமிழ் என்று கூறினார்

(D) "தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி" என்று கவிஞர் கூறினார்

(E) விடை தெரியவில்லை

16. சரியான அகரவரிசையைத் தேர்க.

(A) மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்

(B) கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து

(C) முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்

(D) மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்

(E) விடை தெரியவில்லை

17. பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.

(A) கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்

(B) ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்

(C) தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி

(D) ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான்

(E) விடை தெரியவில்லை

18. 'தேடு'- வினைமுற்று சொல்

(A) தேடிய

(B) தேடினார்

(D) தேடுதல்

(C) தேடி

(E) விடை தெரியவில்லை

19. எடுப்பு - எதிர்ச்சொல் தருக.

(A) தொடங்குதல்

(B) முடித்தல்

(C) நிற்றல்

(D) ஏற்றல்

(E) விடை தெரியவில்லை

20. 'தண்டளிர்ப்பதம்' இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.

(A) தண் + அளிர் + பதம்

(B) தன்மை + தளிர் + பதம்

(C) தண்மை + தளிர் + பதம்

(D) தண்டளிர் + பதம்

(E) விடை தெரியவில்லை

21. கலம்பகம் - இச்சொல்லைப் பிரித்து எழுதுக.

(A) கலம் + அகம்

(B) கலம் + பகம்

(C) கலம்பு + அகம்

(D) கல் + அம்பகம்

(E) விடை தெரியவில்லை

22. 'பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்' என்று குறிப்பிடும் நூல்

(A) கலித்தொகை

(B) பரிபாடல்

(C) அகநானூறு

(D) புறநானூறு

(E) விடை தெரியவில்லை

23. அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது ?

(A) நெடுந்தொகை

(B) திருக்குறள்

(C) முத்தொள்ளாயிரம்

(D) கம்பராமாயணம்

(E) விடை தெரியவில்லை

24. "குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” - இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?

(A) கரிசலாங்கண்ணி

(B) தூதுவளை

(C) குப்பைமேனி

(D) சோற்றுக்கற்றாழை

(E) விடை தெரியவில்லை.

25. புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்

(A) உ.வே.சா.

(B) ஜி.யு. போப்

(C) சீகன் பால்கு ஐயர்

(D) வீரமாமுனிவர்

(E) விடை தெரியவில்லை

விடைகள்

1. (D) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது

2. (D) பசு

3. (C) இசைவு

4. (B) சித்தர்கள்

5. (C) பள்ளுப்பாட்டு

6. (C) காளமேகப் புலவர்

7. (B) அழகிய சொக்கநாதப் புலவர்

8. (C) திரு.வி. கலியாண சுந்தரனார்

9. (A) அனைத்தும் சரி

10. (C) கூற்று இரண்டும் சரி .

11. (D) அரசு ஆணை பிறப்பித்தது

12. (A) எத்தனை மாடுகள் மேய்ந்தன?

13. (C) இங்கு நகரப்பேருந்து நிற்குமா?

14. (C) தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்

15. (D) "தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி" என்று கவிஞர் கூறினார்

16. (B) கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து

17. (B) ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்

18. (B) தேடினார்

19. (B) முடித்தல்

20. (C) தண்மை + தளிர் + பதம்

21. (B) கலம் + பகம்

22. (C) அகநானூறு

23. (B) திருக்குறள்

24. (D) சோற்றுக்கற்றாழை

25. (A) உ.வே.சா.

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 1

1. 'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று.(A) வந்தாள் (B) வந்த(C) வந்து(D) வந்தவர் 2. இராமன் வந்தான் - எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.(A) வினைமுற்றுத் தொடர்(B) எழுவாய்த் தொடர்(C) பெயரெச்சத் தொடர்(D) வின... மேலும் பார்க்க

வினா - விடை... மராத்தியர்கள்!

1. சிவாஜியின் தந்தை யார்?a) சம்பாஜிb) ஷாஜி போன்ஸ்லேc) பாலாஜி விஷ்வநாத்d) நானாஜி2. சிவாஜி எந்த ஆண்டில் மன்னராக முடிசூட்டிக்கொண்டார்?a) 1670b) 1674 c) 1680d) 16603. சிவாஜி உருவாக்கிய நிர்வாக அமைப்பின் ப... மேலும் பார்க்க

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 3

1. பின்வருவனவற்றைப் பொருத்துக(a) காரோ 1. அஸ்ஸாம்(b) கூகி 2. மிசோரம்(C) தோடர் 3. தமிழ்நாடு(d) மிரி 4. அருணாச்சலப் பிரதேசம் (a) (b) (c) (d)(A) 2 4 1 3(B) 1 2 4 3(C) 1 2 3 4 (D) 2 4 3 12. அமராவதியிலுள்ள ... மேலும் பார்க்க

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 2

1. கீழ்க்காணும் கூற்றுகளுக்குரிய பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க1. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் -2. இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர்(A) இவ்விரண்டு வரிகளும் அரசரின் பெருமையைப் பேசுகின்றன(B) இவ... மேலும் பார்க்க

வினா - விடை வங்கி... பாளையக்காரர்கள் புரட்சி! - 2

1. காளையார்கோவில் அரண்மணை தாக்கப்பட்ட ஆண்டு?(a) 1772(b) 1773(c) 1775(d) 17802. முத்துவடுகநாதர் எந்த போரில் கொல்லப்பட்டார்?(a) நாகலாபுரம் போர்(b) களக்காடு போர்(c) காளையார்கோவில் போர்(d) மைசூர் போர்3. த... மேலும் பார்க்க

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்!

1. கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று, உலக அளவில், வெள்ளம் வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக்காரணமாக இருக்கிறது?(A) கரியமில வாயு(C... மேலும் பார்க்க