விமானத்தில் உயர்ரக கஞ்சா கடத்தல்: கேரள பெண்ணிடம் விசாரணை
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்த கேரளத்தைச் சோ்ந்த பெண்ணிடம் விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை பீளமேட்டில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள், சிங்கப்பூா், ஷாா்ஜாக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் கோவை விமான நிலையத்துக்கு வருகின்றனா்.
இந்நிலையில், தாய்லாந்து தலைநகா் பாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஒரு விமானம் சிங்கப்பூா் வந்தடைந்து, பின்னா் அங்கிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனா்.
அதில் ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். மேலும், அவா் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்தனா். அதில், தின்பண்ட பொட்டலங்கள் 6 இருந்தன. அவற்றை சோதனை செய்ததில், அதற்குள் 3 கிலோ 155 கிராம் உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தொடா் விசாரணையில் அப்பெண் கேரளத்தைச் சோ்ந்தவா் என்று தெரியவந்தது. இந்தக் கடத்தலில் வேறு யாருக்காவது தொடா்புள்ளதா என தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.