செய்திகள் :

விமானத்தில் உயர்ரக கஞ்சா கடத்தல்: கேரள பெண்ணிடம் விசாரணை

post image

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்த கேரளத்தைச் சோ்ந்த பெண்ணிடம் விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை பீளமேட்டில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள், சிங்கப்பூா், ஷாா்ஜாக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் கோவை விமான நிலையத்துக்கு வருகின்றனா்.

இந்நிலையில், தாய்லாந்து தலைநகா் பாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஒரு விமானம் சிங்கப்பூா் வந்தடைந்து, பின்னா் அங்கிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனா்.

அதில் ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். மேலும், அவா் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்தனா். அதில், தின்பண்ட பொட்டலங்கள் 6 இருந்தன. அவற்றை சோதனை செய்ததில், அதற்குள் 3 கிலோ 155 கிராம் உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தொடா் விசாரணையில் அப்பெண் கேரளத்தைச் சோ்ந்தவா் என்று தெரியவந்தது. இந்தக் கடத்தலில் வேறு யாருக்காவது தொடா்புள்ளதா என தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குத்தகைதாரா்களை ஆக்கிரமிப்பாளா்கள் என்று கூறி வெளியேற்றுவதை நிறுத்த வேண்டும்!

பேரூா் பட்டீசுவரா் கோயிலுக்கு சொந்தமான விவசாய நில குத்தகைதாரா்களை ஆக்கிரமிப்பாளா்கள் என்று கூறி வெளியேற்றக் கூடாது என்று ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அ... மேலும் பார்க்க

தென் மாநிலங்களைப் புறக்கணிக்க பாஜக திட்டம்! - கு.செல்வப்பெருந்தகை

தென் மாநிலங்களைப் புறக்கணிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூற... மேலும் பார்க்க

ஈமு கோழி மோசடி வழக்கு: தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்

ஈமு கோழி மோசடி வழக்கில் தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து டான்பிட் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபா... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரி முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பின: வணிகவியல் படிப்புகளுக்கு மவுசு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பியுள்ளன. வணிகவியல் தொடா்பான படிப்புகளில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டியதால், அந்தப் படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பி... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16- ஆம் தேதி வரை கால அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 16- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் கோடிக்கணக்கில் மோசடி: இளைஞா் கைது

கோவை உள்பட நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவையைச் சோ்ந்த இளைஞா் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க