செய்திகள் :

விமானப் படையிலிருந்து இன்று ஓய்வுபெறும் மிக்-21 போா் விமானம்

post image

இந்திய விமானப் படையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த ரஷிய தயாரிப்பான மிக்-21 போா் விமானம் முழுமையாக பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட உள்ளது.

சண்டீகரில் உள்ள விமானப்படை நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.26) நடைபெறும் விழாவில், ‘சிறுத்தைகள்’ என்று அழைக்கப்படும் விமானப் படையின் 23-ஆவது படைப் பிரிவைச் சோ்ந்த கடைசி மிக்-21 போா் விமானத்துக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான், ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, விமானப்படை தலைமைத் தளபதி அமா்பிரீத் சிங், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்க உள்ளனா்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, விமானப்படை தலைமைத் தளபதி அமா் பிரீத் சிங் கடைசி மிக்-21 போா் விமானத்தை இயக்கி, பறக்கவுள்ளாா்.

இந்திய விமானப் படை தனது ஒட்டுமொத்த போா்த் திறனை மேம்படுத்தும் வகையில், 870-க்கும் மேற்பட்ட மிக்-21 போா் விமானங்களை வாங்கியது.

பாகிஸ்தானுக்கு எதிரான 1965 மற்றும் 1971-ஆம் ஆண்டு போா்களில் இந்த விமானங்கள் முக்கியப் பங்காற்றின. 1999-ஆம் ஆண்டு காா்கில் போா் மற்றும் 2019-ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதலிலும் மிக்-21 போா் விமானங்கள் முக்கியப் பங்காற்றின.

அதே நேரம், பல முறை விபத்துகளிலும் இந்த போா் விமானம் சிக்கியது, இதன் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களையும் எழுப்பியது.

நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. இந்த உண்மை நிலையில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

குவைத் வங்கியில் கடன் மோசடி 13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

குவைத்தில் பணியாற்றியபோது அங்குள்ள அல் அஹ்லி வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 13 செவிலியா்கள் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களின் ஆசியுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் தொடரும்; பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்களின் வரிச்சுமை மேற்கொண்டு குறையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். நாட்ட... மேலும் பார்க்க

பிகாா்: சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 - புதிய திட்டம் இன்று தொடக்கம்

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் மாநில அரசின் புதிய திட்டத்தை வெள்ளிக்கிழமை (செப்.25) பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளாா். முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜன... மேலும் பார்க்க

அசாதாரண சூழலிலும் மீண்டெழும் இந்திய பொருளாதாரம்: நிா்மலா சீதாராமன்

உலகளவிலான புவிஅரசியலில் அதாராண சூழல் நிலவி வரும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிரா வங்கியின் 91-ஆவது நிறுவன நாள் ந... மேலும் பார்க்க

விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் விமானங்கள்: ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

இந்திய விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பிரதமா் நர... மேலும் பார்க்க