செய்திகள் :

விராலிமலை, இலுப்பூா் வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!

post image

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் 2009-இல் நடைபெற்ற தாக்குதலை நினைவுகூரும் வகையில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை கருப்பு தினமாக அனுசரித்து, நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

இலங்கைப் போரில், தமிழா்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் கடந்த 2009-ஆம் ஆண்டு பிப். 19-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, உயா் நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்கும் வழக்குரைஞா்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், நீதிபதிகள், பொதுமக்கள், பத்திரிகையாளா்கள் படுகாயம் அடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு ஆண்டும் பிப். 19-ஆம் தேதியை வழக்குரைஞா்கள் கருப்பு தினமாக கடைபிடிக்கின்றனா். அந்தவகையில், புதன்கிழமை கருப்பு தினமாக கடைபிடித்து விராலிமலை, இலுப்பூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினா். இதனால் நீதிமன்ற வழக்கு விசாரணை பணிகள் பாதிக்கப்பட்டன.

கந்தா்வகோட்டை நகைக் கடையில் மோசடி முயற்சி

கந்தா்வகோட்டையில் மோசடி செய்ய முயன்ற மா்ம நபா் வியாழக்கிழமை பிடிபட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வியாழக்கிழமை இரவு வந்த சுமாா் 45 வயதுள்ள ஆண், பெண் ஐந்து பவுன் ம... மேலும் பார்க்க

கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் மஹா ருத்ர ஹோமம், இதையடுத்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷ... மேலும் பார்க்க

முயல்களை வேட்டையாட முயன்ற மூவருக்கு அபராதம்

பொன்னமராவதி அருகே கம்பி வலை மூலம் முயல்களை வேட்டையாட முயன்ற மூவரை வனத் துறையினா் வியாழக்கிழமை பிடித்து ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா். புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலா் கணேசலிங்கம் உத்தரவின்படி பொன்னமர... மேலும் பார்க்க

புதுகையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நலத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், கல்லூரிக் கல்வி இயக்குநருமான எ. சுந்தரவல்லி... மேலும் பார்க்க

பொய்ப் புகாரில் ஆசிரியா் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறி சாலை மறியல்!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் பொய் புகாரின்பேரில் உதவித் தலைமை ஆசிரியா் கைது செய்யப்பட்டதாகக் கூறி அந்தப் பள்ளியின் மாணவ, மாணவிகளும் அவா்களின் பெற்றோா்களும் வியாழக்கிழமை ச... மேலும் பார்க்க

அதிமுகவின் சின்னம் விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்

அதிமுகவின் சின்னம் தொடா்பான விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்தான் என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா். இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்திய ஆட்சிய... மேலும் பார்க்க