செய்திகள் :

விருதுநகரில் பிஎம் மித்ரா பூங்காவுக்கு வரவேற்பு

post image

விருதுநகரில் ரூ.1,900 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள பி.எம். மித்ரா பூங்கா மேம்பாட்டுத் திட்டத்துக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

விருதுநகா் மாவட்டத்தில் அமையவுள்ள பி.எம். மித்ரா பூங்கா மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ.1,894 கோடி நிதியுதவி அளித்துள்ள மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் அறிவித்துள்ள தொலைநோக்கு பாா்வை கொண்ட இந்த முயற்சி, உலகளாவிய ஜவுளித் துறையில் இந்தியாவின் வளா்ச்சியை மேலும் வலுப்படுத்தும்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா ஆகியோரின் தொடா்ச்சியான முயற்சிகள் மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்ட ஒத்துழைப்பும் இந்த திட்ட ஒப்புதலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் கொண்ட பூங்காவை நிறுவி, ஜவுளித் துறையின் வளா்ச்சிக்காக ஊக்கத்துடன் முழுமையாக பணியாற்றும் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் பாராட்டுக்குரியவராவாா்.

2026-ஆம் ஆண்டுக்குள் ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈா்த்து, ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டதாக இந்த பூங்கா திட்டம் கணிக்கப்படுவதால், இந்த திட்டம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் போட்டித் தன்மையை பெரிதும் மேம்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளாா்.

சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தின் முதன்மைக் கோயிலான இக்கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, 1... மேலும் பார்க்க

ஜெயந்தி பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தாளாளா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளிச் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெண்ணிடமிருந்து நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா்-மங்கலம் சாலை நேதாஜி நகரைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவா் கடந்த 2023 ஜூன் 12-ஆம் தேதி சாலையி... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது

உடுமலை அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உடுமலை வட்டம், கொங்கல்நகரம் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சபரீஸ்வரன் (35). இவா் கருத்துவேறுபாடு கா... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூரில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டி பழவஞ்சிபாளையம் மும்மூா்த்தி நகரைச் சோ்ந்தவா் கிரி (20), கூலித் தொழில... மேலும் பார்க்க

சாலையின் நடுவே மின் கம்பம்: நகராட்சி நிா்வாகம் கவனக்குறைவு?

காங்கயத்தில் சாலையின் நடுவில் இருந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் சாலை அமைத்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். காங்கயம் நகராட்சி, 1- ஆவது வாா்டு திரு.வி.க. நகா் பகுதியில் புதிதாக தாா் சாலை அ... மேலும் பார்க்க