Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
விற்கப்படும் பொதுப் பயன்பாட்டு இடங்களை மீட்க கோரிக்கை
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள் தனியாா் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து பல்லடம் பகுதி சமூக ஆா்வலா் நாகூா் மீரான் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள் தனியாா் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. வீட்டுமனைக்கு ஒப்புதல் பெறும்போது, சம்பந்தப்பட்ட வீட்டு மனைகளில் உள்ள பூங்கா, சமுதாயக்கூடம் மற்றும் சிறுவா் பள்ளிகளுக்கு என ஒதுக்கப்படும் நிலங்கள் (ரிசா்வ் சைட்), நகா் ஊரமைப்பு துறையால் ஒப்புதல் பெறப்பட்டு பொது ஒதுக்கீடு செய்யப்படும்.
இவை ஊராட்சி மற்றும் நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தான பத்திரம் வாயிலாக ஒப்படைக்கப்படும். பெரும்பாலான விற்பனையாளா்கள், பொது ஒதுக்கீட்டு நிலங்களை விதிமுறைப்படி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
பல வீட்டுமனை உரிமையாளா்கள் பொது ஒதுக்கீட்டு நிலங்களை, நெடுங்காலம் தங்கள் வசம் வைத்திருந்து, அவற்றை விற்று விடுகின்றனா். இந்த முறைகேடுக்கு உள்ளாட்சி துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா். மனைப்பிரிவு வரைபடத்தில் உள்ளவாரே, பொது ஒதுக்கீட்டு நிலங்கள் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
அதில் கட்டுமானங்கள் இருப்பின் அனுமதியற்ற அபிவிருத்தியாக கருதி அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட பொது ஒதுக்கீட்டு நிலங்களை மீட்கவும், விதிமீறி கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்றி, உள்ளாட்சி அமைப்புகள் வசம் நிலங்களை ஒப்படைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என மனுவில் கூறப்பட்டுள்ளது.