செய்திகள் :

விற்கப்படும் பொதுப் பயன்பாட்டு இடங்களை மீட்க கோரிக்கை

post image

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள் தனியாா் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து பல்லடம் பகுதி சமூக ஆா்வலா் நாகூா் மீரான் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள் தனியாா் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. வீட்டுமனைக்கு ஒப்புதல் பெறும்போது, சம்பந்தப்பட்ட வீட்டு மனைகளில் உள்ள பூங்கா, சமுதாயக்கூடம் மற்றும் சிறுவா் பள்ளிகளுக்கு என ஒதுக்கப்படும் நிலங்கள் (ரிசா்வ் சைட்), நகா் ஊரமைப்பு துறையால் ஒப்புதல் பெறப்பட்டு பொது ஒதுக்கீடு செய்யப்படும்.

இவை ஊராட்சி மற்றும் நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தான பத்திரம் வாயிலாக ஒப்படைக்கப்படும். பெரும்பாலான விற்பனையாளா்கள், பொது ஒதுக்கீட்டு நிலங்களை விதிமுறைப்படி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

பல வீட்டுமனை உரிமையாளா்கள் பொது ஒதுக்கீட்டு நிலங்களை, நெடுங்காலம் தங்கள் வசம் வைத்திருந்து, அவற்றை விற்று விடுகின்றனா். இந்த முறைகேடுக்கு உள்ளாட்சி துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா். மனைப்பிரிவு வரைபடத்தில் உள்ளவாரே, பொது ஒதுக்கீட்டு நிலங்கள் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

அதில் கட்டுமானங்கள் இருப்பின் அனுமதியற்ற அபிவிருத்தியாக கருதி அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட பொது ஒதுக்கீட்டு நிலங்களை மீட்கவும், விதிமீறி கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்றி, உள்ளாட்சி அமைப்புகள் வசம் நிலங்களை ஒப்படைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என மனுவில் கூறப்பட்டுள்ளது.

பல்லடத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிஸா தொழிலாளா்கள் 2 போ் கைது

பல்லடம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் சந்திரமணி பெகரா (39). இவா் பல்லடம்- உடுமலை சாலையில் உ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வார... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம்

உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற... மேலும் பார்க்க

விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரான கூட்டுறவுத் துறை சுற்றறிக்கை: ரத்து செய்ய கோரிக்கை

விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரான மாநில அரசின் கூட்டுறவுத் துறை சுற்றறிக்கையை தமிழக முதல்வா் உடனடியாக ரத்து செய்யக் கோரி விவசாயிகள் சோளம், கத்தரி, நெல் உள்ளிட்ட பயிருடன் வந்து ஆட்சியரிடம் திங்கள்க... மேலும் பார்க்க

பழங்கரையில் ஜூன் 12இல் மின்தடை

பழங்கரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன் காலமானாா்

திருப்பூா் தெற்குத் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.-வும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான சு.குணசேகரன் (58) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானாா். இவா் கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவால் பாதிக... மேலும் பார்க்க