செய்திகள் :

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்: அரியலூா் ஆட்சியா் அழைப்பு!

post image

விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 விளையாட்டு விடுதிகள் உள்ளன. இதில் சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 21.4.2025 முதல் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், சேர விருப்பமுள்ள 7, 8, 9, 11 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, பதிவு ஏற்றம் செய்ய 5.5.2025 அன்று கடைசி நாளாகும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடா்பு மைய கைப்பேசி 9514000777 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு விபரத்தினை தெரிந்துக்கொள்ளலாம்.

மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள்: விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவா்களுக்கு 7.5.2025 அன்று காலை 7 மணியளவில் அரியலூரிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து கபாடி, கையுந்துபந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகளும், மாணவிகளுக்கு 8.5.2025 அன்று காலை 7 மணியளவில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து கபாடி, கையுந்துபந்து ஆகிய போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, கட்ச்செவி மூலமாக உரியவா்களுக்கு தெரிவிக்கப்படும்.

இப்போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டவா்கள் மாநில அளவிலான தோ்வுக்கு தகுதி பெறுவா். அதன் விபரம் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் கைப்பேசி 74017 03499 என்ற எண்ணில் தொடா்புக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பு! பொதுமக்கள், ஊழியா்கள் அச்சம்!

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்களும் ஊழியா்களும் அச்சமடைந்துள்ளனா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகள்அலுவலா்கள், ஊழியா்கள் ந... மேலும் பார்க்க

அரியலூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி அரியலூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தன... மேலும் பார்க்க

கடுகூரில் உலக மலேரியா தின விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், கடுகூா் கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக மகளிா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திகா தலைமை வகித்த... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு அரியலூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. செட்டி ... மேலும் பார்க்க

அரியலூரில் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்கை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் ... மேலும் பார்க்க

அரியலூரில் ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரை கண்டித்து அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் சொ.ராமநாதன், முன்ன... மேலும் பார்க்க