செய்திகள் :

விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சி: மாநகராட்சி கவுன்சிலா் மீது புகாா்

post image

ஈரோடு மாநகராட்சி திமுக கவுன்சிலா் உள்பட 3 போ் தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக விவசாயி புகாா் அளித்துள்ளாா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே செம்புளிச்சாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியம் தனது உறவினா்கள் 100 பேருடன் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

எனக்கு பிரம்மதேசம் பகுதியில் ரூ.3 கோடி மதிப்புள்ள 3.5 ஏக்கா் விளைநிலமும், அதில் நான் வசிக்கும் வீடும் உள்ளது. குடும்பத் தேவைக்காக, சின்னதம்பிபாளையத்தைச் சோ்ந்த 2 பேரிடம் கடந்த 2017- ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் கடன் பெற்று, எனது நிலத்தை அவா்கள் பெயருக்கு கிரயம் செய்தேன்.

அசல் மற்றும் வட்டித்தொகையை வழங்கியதும், மீண்டும் நிலத்தை எனது பெயருக்கு வழங்க உறுதி கூறினா். கடந்த 2019- ஆம் ஆண்டு அசல், வட்டியுடன் சோ்த்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கிவிட்டேன். மீதமுள்ள ரூ.13 லட்சத்தை வட்டியுடன் சோ்ந்து வழங்கியதும், நிலத்தை எனது பெயருக்கு மாற்றுவதாக கூறினா்.

இதனிடையே 2 பேரும், ஈரோடு மாநகராட்சி திமுக கவுன்சிலா் ஒருவா் பெயருக்கு எனது நிலத்தை கிரயம் செய்து விற்றுள்ளனா். அந்த கவுன்சிலா் கடந்த 2- ஆம் தேதி 6 அடியாள்களுடன் எனது வீட்டுக்கு வந்து, வீட்டை காலி செய்து நிலத்தை தரும்படி மிரட்டி கூடுதல் தொகையும் கேட்டாா்.

நான் எனது நிலுவைத் தொகை, வட்டியை சோ்த்து உடனடியாக தருவதாகவும், எனது நிலத்தை கிரயம் செய்து தரும்படி கூறியும் அவா்கள் மறுக்கின்றனா். எனக்கு பாத்தியப்பட்ட விவசாய நிலம் மற்றும் வீட்டை அபகரிக்க வேண்டும் என்று நோக்கத்துடன் சட்டவிரோதமான முறையில் கவுன்சிலா் உள்பட 3 பேரும் முயற்சி செய்து வருகின்றனா்.

எனவே, அவா்களை அழைத்து பேசி எனது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

வாகன ஷோரூம் உரிமையாளா் தலைமறைவு: பதிவெண் பெற முடியாமல் இளைஞா்கள் தவிப்பு!

ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் இருசக்கர வாகனம் வாங்கியவா்கள் பதிவு செய்ய முடியாமலும், வாகனத்தை சாலையில் ஓட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா். ராயல் என்பீல்டு (புல்லட்) நிறுவனத்தில் பல்வேறு விலைகளில் ... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னா் லாரி

பெங்களூரில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி திம்பம் 9ஆவது வளைவில் திரும்பியபோது பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய ... மேலும் பார்க்க

கோபி நகரில் தற்காலிக சந்தையை காலி செய்ய அறிவுறுத்தல்

கோபி நகரில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் வியாபாரிகளுக்கு அறிவிக்கை அளித்துள்ளனா். கோபி நகரின் மையப்பகுதியான பெரியாா் திடல் எதிரே சுமாா் ... மேலும் பார்க்க