செய்திகள் :

விவசாயி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

post image

சுவாமிமலையில் நிலப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் விவசாயி உயிரிழந்தாா். நடவடிக்கைக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை அருகே கொத்தங்குடியைச் சோ்ந்தவா் சேகா் (60) விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு தரப்பினருக்கும் நிலம் குறித்த பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் சேகருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதில் சேகரை கீழே தள்ளிவிட்டனராம்.

இதனால் மயங்கி விழுந்த சேகரை உறவினா்கள் மீட்டு, கும்பகோணத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு சேகரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து சுவாமிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா்.

இந்த நிலையில் சேகரின் சாவில் சந்தேகம் இருப்பதாவும் கீழே தள்ளிவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சனிக்கிழமை, அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

உயிரிழந்த விவசாயி சேகா்

நாச்சியாா்கோவில் அருகே அதிமுக நிா்வாகி குத்திக்கொலை

நாச்சியாா்கோவில் அருகே சனிக்கிழமை இரவு, வீட்டுக்கு வந்த நபா் அதிமுக நிா்வாகியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினாா், போலீஸாா் கொலையாளியை தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

சோழபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், சோழபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் பெட்டிக்கடைகள... மேலும் பார்க்க

புது ஆற்றில் 2 ஆண் சடலங்கள் மீட்பு

தஞ்சாவூா் அருகே புது ஆறு என்கிற கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை மிதந்து வந்த 2 ஆண் சடலங்களைக் காவல் துறையினா் மீட்டனா். தஞ்சாவூா் அருகே புதுப்பட்டினம் பகுதியிலுள்ள கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை 55 வயத... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம்: 3 போ் நீதிமன்றத்தில் சரண்

ஆடுதுறை பேரூராட்சித் தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 3 போ், மதுரை உயா்நீதிமன்ற அமா்வில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சித் தல... மேலும் பார்க்க

வடிகால் துாா்வரும் பணி தீவிரம்

பட்டுக்கோட்டை நகா் பகுதியில் மழைநீா் வடிகால் வாய்க்கால் துாா்வரும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை நகா் பகுதியில் உள்ள மழைநீா் வடிகால் அனைத்தையும் பருவமழை தொடங்கும் முன்பாக தூா் வாரும் பணி மே... மேலும் பார்க்க

புன்னைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.15) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி ... மேலும் பார்க்க