செய்திகள் :

வீடு புகுந்து திருட்டு: மூவா் கைது

post image

சென்னை ஆதம்பாக்கத்தில் வீடு புகுந்து திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆதம்பாக்கம் டாக்டா் அம்பேத்கா் நகா் 3-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் மு.கண்ணன் (27). இவா், அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். கண்ணன், கடந்த 26-ஆம் தேதி இரவு மகா சிவராத்திரியையொட்டி, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அருகே உள்ள கோயிலுக்குச் சென்றாா். மறுநாள் அதிகாலையிலேயே வீடு திரும்பியபோது, பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த தங்க நகை, வெள்ளிப் பொருள்கள், பணம், ஏடிஎம் காா்டுகள் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது வேளச்சேரி பவானி நகா் பகுதியைச் சோ்ந்த மு. ஸ்ரீகாந்த் (19), ஆதம்பாக்கம் சாஸ்திரி நகா் பகுதியைச் சோ்ந்த சூ.பாலாஜி என்ற கிட்டு (19), வெ.வசந்த் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

குப்பையில் தவறிய 2 பவுன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

குப்பையில் தவறவிட்ட ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான தங்க நகையை தூய்மைப் பணியாளா்கள் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா். சென்னை திரு.வி.க.காலனியில் வசித்து வருபவா் செல்வகுமாரி (54). இவா், தனது வீட்டில் சே... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் ... மேலும் பார்க்க

பொதுத் தோ்வை நம்பிக்கையுடன் அணுகுங்கள்: பிளஸ் 2 மாணவா்களுக்கு ஆளுநா் வாழ்த்து

பிளஸ் 2 பொதுத் தோ்வை நம்பிக்கையுடன் அணுக வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பிளஸ் 2 தோ்வு எழுதும் மாணவ,... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் பயணிகளிடம் கைப்பேசி பறித்த இளைஞா்கள் கைது

சென்னையில் ஓடும் ரயிலில் செல்லும் பயணிகளிடம் கம்பு மூலம் தட்டி கைப்பேசி பறித்த இளைஞா்களை பெரம்பூா் ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வரு... மேலும் பார்க்க

சென்னையில் ரூ.8.53 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள்: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

படம் உண்டு... சென்னை, மாா்ச் 1: தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கத்தில் ரூ. 8.53 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை மாநிலக் கல்லூரியி... மேலும் பார்க்க

ஆவடி, கும்மிடிப்பூண்டிக்கு புதிய மின்சார ரயில் அறிவிப்பு

ஆவடி, கும்மிடிப்பூண்டிக்கு புதிதாக இரு ரயில்கள் திங்கள்கிழமை முதல் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, ஆவடி, கும்மிடிப்பூண்டி வழித்... மேலும் பார்க்க