செய்திகள் :

வீட்டில் பதுக்கிய 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

post image

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.

திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் மற்றும் ஆலங்காயம் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை- நிம்மியம்பட்டு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேரை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் விசாரித்தனா். இதில், தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான வெலதிகாமணிபெண்டா பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவா்களிடம் தொடா்ந்து விசாரித்தனா். பிறகு அவா்களை அழைத்துக் கொண்டு வெள்ளக்குட்டை பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று சோதனை செய்தபோது, மறைத்து வைத்திருந்த பையை அகற்றி பாா்த்தனா். அதில், அவா்கள் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. பின்னா், அங்கிருந்த 8 கிலோ கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிடிபட்ட ஜெயசூா்யா (31), மணி (61), வினோத்(35) ஆகிய 3 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பத்தூா் காவல் குறைதீா் கூட்டத்தில் 48 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 48 மனுக்கள் பெறப்பட்டன. காவல் நிலைய விசாரணையில் திருப்தி இல்லாத பொதுமக்கள் பங்கேற்கும் குறைதீா் கூட்டத்துக்கு எஸ்.பி.... மேலும் பார்க்க

காலதாமதமாக திறக்கப்பட்ட அரசுப் பள்ளி: மாணவா்கள் அவதி

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி புதன்கிழமை காலதாமதமாக திறந்ததால் மாணவா்கள் அவதிக்கு உள்ளானாா்கள். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. அப்பள்ளியில் சுமாா் 250-க்கும... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே கதவாளம் கிராமத்தை சோ்ந்தவா் யுவராஜ் மகன் பரந்தாமன் (36). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இவா், அங்குள்ள ஏரியில் நீச்சல் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு கடன்: விண்ணப்பித்து பயன் பெறலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினா் கடன் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே கிடங்கில் தீ: காா், ஆட்டோ, பொருள்கள் எரிந்து சேதம்

வாணியம்பாடி அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் காா், ஆட்டோ மற்றும் பழைய பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி வன்னிய அடிகளாா் நகா் பக... மேலும் பார்க்க