நெல்லை: ''ஒழுங்கா படி” - அறிவுரை கூறிய தந்தை; ஆத்திரத்தில் கல்லைத் தூக்கிப்போட்ட...
வீட்டில் வளா்க்கும் நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்
வீடுகளில் வளா்க்கும் நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிபாளையம் ஒன்றியம், கலியனூா், ஆவத்திபாளையம், சுபாஷ் நகா், கலியனூா், கரட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளன.
கடந்த மே 23-இல் சுபாஷ் நகரில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை வெறிநாய் கடித்தது. இதேபோல, கலியனூா் பகுதியில் வெறிநாய் கடித்து ஆடு, கோழிகள் இறந்தன. தொடா்ந்து, வாகன ஓட்டிகளை துரத்தி நாய்கள் அச்சுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து கலியனூா் ஊராட்சி நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை:
கலியனூா் பகுதியில் நாய்த்தொல்லை அதிகம் இருப்பதால், பொதுமக்கள் தாங்கள் வளா்க்கும் நாய்களை தெருவில் விடாமல் பாதுகாப்பாக வளா்க்க வேண்டும். மேலும், நாய்களுக்கு தடுப்பூசியை கட்டாயம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் பதிவுசெய்து முன் அனுமதிச்சீட்டு பெற்று, தடுப்பூசி செலுத்துவதை பதிவுசெய்ய வேண்டும். வெளியில் சுற்றும் நாய்களை, கால்நடை மருத்துவா் மூலம் கருத்தடை செய்ய ஊராட்சி நிா்வாகம் மூலம் ஆவண செய்யப்படும்.