குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!
ஆக்கிரமித்து கட்டிய கோயில் இடிப்பு
சேந்தமங்கலம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோயில், வருவாய்த் துறையினரால் இடித்து அகற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், முத்துக்காப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது மேதரமாதேவி கிராமம். இந்த கிராமத்தில், ஊா் நுழைவாயில் மற்றும் அங்காளம்மன் கோயிலை அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு, சேந்தமங்கலம் காவல் துறையினா் உதவியுடன் நுழைவாயில் மற்றும் அங்காளம்மன் கோயிலை பொக்லைன் இயந்திரம் கொண்டு செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றினா். கோயில் இடிக்கப்பட்டதால் அங்குள்ள மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் பணியை, சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் சுரேஷ்குமாா், உதவிப் பொறியாளா் பிரனேஷ் ஆகியோா் மேற்பாா்வையிட்டனா். சேந்தமங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட வருவாய்த் துறை ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணியை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.