'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
வீட்டில் விளக்கு தவறி விழுந்ததால் தீ விபத்து
பரமத்தி வேலூரில் சுவாமி மாடத்தில் ஏற்றி வைத்திருந்த விளக்கு தவறி விழுந்ததில் வீட்டில் இருந்த பொருள்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.
பரமத்தி வேலூா் காவிரி சாலையில் உள்ள மேலத்தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (75). அரிசி வியாபாரியான இவரது மனைவி தனலட்சுமி (65) வியாழக்கிழமை வழக்கம் போல வீட்டு சுவாமி படத்தின் முன் இருந்த மாடத்தில் விளக்கு ஏற்றியுள்ளாா். அதன்பிறகு கிருஷ்ணமூா்த்தி அரிசி கடைக்கு சென்றுவிட்டாா்.
அப்போது, சுவாமி மாடத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கு தவறி விழுந்ததில் அங்கிருந்த பொருள்கள் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து அங்கு வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினா் தீயை கட்டுப்படுத்தி அருகே இருந்த குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுத்தனா்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், மெத்தை, பீரோ, உணவுப் பொருட்கள், பாத்திரங்கள், பல்வேறு ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து வேலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.