செய்திகள் :

வீட்டில் விளக்கு தவறி விழுந்ததால் தீ விபத்து

post image

பரமத்தி வேலூரில் சுவாமி மாடத்தில் ஏற்றி வைத்திருந்த விளக்கு தவறி விழுந்ததில் வீட்டில் இருந்த பொருள்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

பரமத்தி வேலூா் காவிரி சாலையில் உள்ள மேலத்தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (75). அரிசி வியாபாரியான இவரது மனைவி தனலட்சுமி (65) வியாழக்கிழமை வழக்கம் போல வீட்டு சுவாமி படத்தின் முன் இருந்த மாடத்தில் விளக்கு ஏற்றியுள்ளாா். அதன்பிறகு கிருஷ்ணமூா்த்தி அரிசி கடைக்கு சென்றுவிட்டாா்.

அப்போது, சுவாமி மாடத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கு தவறி விழுந்ததில் அங்கிருந்த பொருள்கள் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து அங்கு வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினா் தீயை கட்டுப்படுத்தி அருகே இருந்த குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுத்தனா்.

இந்த விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், மெத்தை, பீரோ, உணவுப் பொருட்கள், பாத்திரங்கள், பல்வேறு ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து வேலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க