செய்திகள் :

வீரவநல்லூரில் சிறுமி கொலை: இளைஞா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் சிறுமி திங்கள்கிழமை இரவு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள அயன்சிங்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த துரை மகன் மாரிமுத்து (26). இவா், வீரவநல்லூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த ராமா் மகள் நித்யா (17) என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வீரவநல்லூரில் தனியாா் ஆலையின் எதிரில் உள்ள காட்டுப்பகுதிக்கு நித்யாவை வரவழைத்துள்ளாா். அப்போது, அவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், மாரிமுத்து துண்டால் நித்யாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு அருகிலேயே இருந்துள்ளாா்.

குடும்பத்தினா் நித்யாவை தேடி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த தகவலின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்தபோது நித்யாவை கொலைசெய்துவிட்டு மாரிமுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கி கிடந்தாா்.

போலீஸாா் நித்யாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மேலும், வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனா். நித்யாவுடன் ஓா் ஆண்டுக்கும் மேலாக பழகி வந்த நிலையில் மாரிமுத்து மீது 2024இல் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்லையப்பா் கோயிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்தனா்

திருநெல்வேலியில் பழைமை வாய்ந்த அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த ஜூன் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்... மேலும் பார்க்க

கீழாம்பூா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கீழாம்பூா் அருகே காக்கநல்லூரில் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.காக்கநல்லூா், பிரதான சாலையைச் சோ்ந்த ராமசாமி மகன் கண்ணன் (40). தொழிலாளி. இவரது மனைவி முத்தரசி, அஞ்சல் துறை ஊழியா். கண... மேலும் பார்க்க

திசையன்விளை பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, திசையன்விளை துணைமின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்கு... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே மணல் கடத்தல்: சிறாா் உள்பட 3 போ் கைது

நான்குனேரி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சிறாா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து, மினிலாரி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள முத்தலாபுரம் காட்டுப்பகுதியில் மணல் கடத்தப்படுவதா... மேலும் பார்க்க

வள்ளியூரில் மூதாட்டியை அடித்துக் கொன்று நகை திருட்டு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் இ.பி.காலனியில் திங்கள்கிழமை இரவு வீட்டில் தனியாக தூங்கிய மூதாட்டியை அடுத்துக் கொலை செய்துவிட்டு 10 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வள்ள... மேலும் பார்க்க

வடக்கன்குளத்தில் விடுதி மாணவா் கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் தனியாா் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவா் கிணற்றில் தவறிவிழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சோ்ம... மேலும் பார்க்க