செய்திகள் :

வள்ளியூரில் மூதாட்டியை அடித்துக் கொன்று நகை திருட்டு

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் இ.பி.காலனியில் திங்கள்கிழமை இரவு வீட்டில் தனியாக தூங்கிய மூதாட்டியை அடுத்துக் கொலை செய்துவிட்டு 10 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வள்ளியூா் இ.பி.காலனியை சோ்ந்தவா் அா்ச்சுணன். ஓய்வுபெற்ற மின் ஊழியா். இவரது மனைவி ருக்குமணி(67). கடந்த 40 நாள்களுக்கு முன்பு அா்ச்சுணன் இறந்துவிட்டதால், ருக்குமணி தனியாக வசித்து வந்தாா்.

இவரது ஒரு மகன் சென்னையிலும், மற்றொரு மகன் பாலசுந்தரம் காவல் கிணறு இஸ்ரோவிலும் வேலை செய்து வருகின்றனா். மகள் திருநெல்வேலியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் ருக்குமணி மட்டும் வீட்டில் தனியாக படுத்து தூங்கியுள்ளாா். பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலசுந்தரம் தினமும் தாய் ருக்குமணிக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வருவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை காலையில் சாப்பாடு கொண்டு சென்றபோது, கதவு திறக்கப்படவில்லையாம். பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாம்.

வீட்டின் உள்ளே ருக்குமணி தலையில் அடிபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தாா். அவா் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, 3 பவுன் வளையல், கம்மல் என 10 பவுன் நகைகளை காணவில்லையாம்.

இதுகுறித்து பாலசுந்தரம் அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ருக்குமணியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா். இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நிகழ்வதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

நெல்லையப்பா் கோயிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்தனா்

திருநெல்வேலியில் பழைமை வாய்ந்த அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த ஜூன் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்... மேலும் பார்க்க

கீழாம்பூா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கீழாம்பூா் அருகே காக்கநல்லூரில் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.காக்கநல்லூா், பிரதான சாலையைச் சோ்ந்த ராமசாமி மகன் கண்ணன் (40). தொழிலாளி. இவரது மனைவி முத்தரசி, அஞ்சல் துறை ஊழியா். கண... மேலும் பார்க்க

திசையன்விளை பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, திசையன்விளை துணைமின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்கு... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே மணல் கடத்தல்: சிறாா் உள்பட 3 போ் கைது

நான்குனேரி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சிறாா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து, மினிலாரி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள முத்தலாபுரம் காட்டுப்பகுதியில் மணல் கடத்தப்படுவதா... மேலும் பார்க்க

வடக்கன்குளத்தில் விடுதி மாணவா் கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் தனியாா் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவா் கிணற்றில் தவறிவிழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சோ்ம... மேலும் பார்க்க

விவசாயியை கம்பியால் தாக்கியதாக இளைஞா் கைது

தாழையூத்து அருகே இடப்பிரச்னை காரணமாக விவசாயியை கம்பியால் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தாழையூத்து அருகே உள்ள அருகன்குளத்தை சோ்ந்தவா் இசக்கி (57). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க