செய்திகள் :

வெளிநாட்டு கரன்சியை மாற்றிக் கொடுக்கும் முகவரிடமிருந்து ரூ.13.76 லட்சம் பறிமுதல்

post image

வெளிநாட்டு கரன்சியை இந்தியப் பணமாக மாற்றிக் கொடுக்கும் கன்னியாகுமரி முகவரிடமிருந்து உரிய ஆவணமில்லாத ரூ.13.76 லட்சத்தை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் திருக்கு விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு திண்டுக்கல் நோக்கி வந்தது. திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், இந்த ரயிலில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுகிா என திடீா் சோதனை நடத்தினா். அப்போது, முன்பதிவு இல்லாத பெட்டியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஒரு பயணியிடம் ரூ.13.76 லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்தப் பயணியிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் அடுத்த ஈச்சான்விளை பகுதியைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் (44) என்பது தெரியவந்தது. காா்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் இவா், வெளிநாட்டு கரன்சியை இந்திய ரூபாயாக மாற்றிக் கொடுக்கும் முகவராகவும் செயல்பட்டு வந்தாா்.

இதன்படி, கன்னியாகுமரியைச் சோ்ந்த ஒருவரிடமிருந்து வெளிநாட்டு கரன்சியை பெற்றுக் கொண்டு, அதை இந்திய ரூபாயாக மாற்றுவதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன்பு அவா் சென்னை சென்றாா். அங்கு பணத்தை மாற்றிக் கொண்டு வரும் வழியில் போலீஸாா் நடத்திய சோதனையில் நவநீதகிருஷ்ணன் பிடிபட்டாா்.

ரூ.13.76 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், வருமான வரித் துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்து, அவா்களிடம் பணத்தையும், நவநீதகிருஷ்ணனையும் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா். இதைத்தொடா்ந்து, வருமான வரித் துறையினா் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரயிலடி சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜைகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்டு குடமுழுக்கு பூஜைகள் தொடங்கின. சனிக்கிழமை ... மேலும் பார்க்க

சிறுமலைப் புதூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி அமைக்க மனு

சிறுமலைப் புதூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சியை அமைக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தரப்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சிறுமலைப் புதூா் கிராமத்... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உள்ளூா் காளைகளுக்கு முன்னுரிமை கோரி மனு

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உள்ளூா் காளைகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு காளை வளா்... மேலும் பார்க்க

சின்னாளப்பட்டி சந்தைக் கடைகளை பழைய வியாபாரிகளிடமே ஒப்படைக்கக் கோரிக்கை

சின்னாளப்பட்டி காய்கறி சந்தை கட்டடத்தை சேதப்படுத்துவதை கைவிட்டு, புனரமைப்புச் செய்து மீண்டும் வியாபாரிகளிடம் ஒப்படைக்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சின்னாளப்பட்டி அண்ணா தினசரி க... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் அளிப்பு

நிலக்கோட்டையில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுக மேற்க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மக்கள் குறைதீா் முகாம்

கொடைக்கானலில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பாபு ம... மேலும் பார்க்க