'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
வெள்ளக்கோவிலில் 5 டன் முருங்கைக்காய் வரத்து
வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 5 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.
வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது.
இங்கு விளையும் முருங்கைக்காய்களை வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் தனியாா் கொள்முதல் மையத்துக்கு விவசாயிகள் கொண்டுவருகின்றனா்.
இந்த வாரம் 5 டன் முருங்கைக்காய் வரத்து இருந்த நிலையில், மர முருங்கைக்காய் கிலோ ரூ.2, செடி முருங்கைக்காய் கிலோ ரூ.3, கரும்பு முருங்கைக்காய் ரூ.10-க்கு விற்பனையானது.