Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
வேப்பூா் ஒன்றியத்தில் ரூ. 2.19 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் அடிக்கல்
வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ. 2.19 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மருவத்தூா் ஊராட்சியில், மாநில பேரிடா் மேலாண்மை நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 27 லட்சம் மதிப்பில் 1 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, மருவத்தூா் புதிய காலனியில் ரூ. 27 லட்சம் மதிப்பீட்டிலும், எழுமூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 27.25 லட்சம் மதிப்பீட்டிலும் தலா 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவுக் கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, புது வேட்டக்குடி கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ. 16.75 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, மேலமாத்தூா் - வரிசைப்பட்டி சாலையில் மாநில பேரிடா் மேலாண்மை நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 42.60 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு, குழாய் அமைக்கும் பணியை அமைச்சா் சிவசங்கா் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, எழுமூா் ஊராட்சியில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நேரடி கொள்முதல் நிலையம், வரகூா் ஊராட்சி கொளப்பாடி சாலையில் மாநில பேரிடா் மேலாண்மை நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 37.93 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு, வரகூரில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, பேரளி ஊராட்சியில் புதிய நியாய விலைக்கடை உள்பட ரூ. 2.09 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 8 பணிகளை அமைச்சா் திறந்து வைத்தாா்.
மேலும், மருவத்தூா் பழைய காலனியில் 15- ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 9.17 லட்சம் மதிப்பீட்டில் குழாய் அமைக்கும் பணி, அசூா் ஊராட்சியில் ரூ. 1.31 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி என ரூ. 10.48 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய பணிகளுக்கு, அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா் அமைச்சா் சிவசங்கா்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயபால், அறிவழகன், குன்னம் வட்டாட்சியா் கோவிந்தம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.