செய்திகள் :

வேலை... வேலை... வேலை... அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்கள் அறிவிப்பு!

post image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் மார்ச் 21 முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 போக்குவவரத்துக் கழகங்கள் மூலமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. நகர், புறநகர் என அனைத்துப் பகுதிகளுக்கும் சேவை இருப்பதால் பெரும்பாலான மக்கள் நாள்தோறும் போக்குவரத்துக் கழக பேருந்து சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் சேவை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் வேலை!

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில்(எம்டிசி) 364 காலியிடங்கள், விரைவு போக்குவரத்துக் கழகத்தில்(எஸ்இடிசி) 318 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை(மார்ச் 21) பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதியும் ஆர்வமும் உள்ளோர் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்துவிட்டீர்களா? திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் பணிகள்!

வேலூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Guest Lecturersசம்பளம்: மாதம் ரூ. 25... மேலும் பார்க்க

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாவட்ட சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணிகள்

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார மையங்களில் நவவாழ்வு சங்கத்தின்கீழ் உள்ள கீழ்வரும் காலிப் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிட... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள பயிற்சி ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 4 ஆம் தேதிக்குள் வி... மேலும் பார்க்க

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை!

பொதுத்துறை மின்உற்பத்தி நிறுவனமான தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவித்தொகை திட... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். ... மேலும் பார்க்க

உதவித்தொகையுடன் ரயில் சக்கரம் தொழிற்சாலையில் பயிற்சி

கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் ரயில் சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங... மேலும் பார்க்க