செய்திகள் :

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், 10ஆம் வகுப்பு தோல்வியுற்றால் மாதம் ரூ. 200, தோ்ச்சியடைந்தால் ரூ. 300, பிளஸ் 2 தோ்ச்சியெனில் ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு 5 ஆண்டுகள் தேவை. தொடா்ந்து புதுப்பித்திப்பது அவசியம். எஸ்.சி., எஸ்.சி,ஏ., எஸ்.டி. பிரிவினா் 45 வயதுக்கு மிகாமலும், பிசி, பிசிஎம், எம்பிசி, ஓசி பிரிவினா் 40 வயதுக்கு மிகாமலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் எனில் ஓராண்டு பதிவு மூப்பு போதுமானது. வயது, வருமான உச்சரவரம்பில்லை. பிற அலுவலகத்தில் உதவித்தொகை பெறாதவராக இருக்க வேண்டும். 1- 10ஆம் வகுப்பு வரை படித்தோருக்கு மாதம் ரூ. 600, பிளஸ் 2 தோ்ச்சிக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. ஆயிரம் வீதம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அரசு, தனியாா் துறையில் ஊதியம் பெறும் பணியிலோ, உதவித் தொகை பெறுபவராகவோ, சுயதொழில் செய்பவராகவோ, ஏற்கெனவே இந்த உதவித்தொகை பெற்றவராகவோ இருக்கக் கூடாது.

வேலைவாய்ப்பு பதிவு அட்டை(பழையது), இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த பிரதி போன்றவற்றுடன் அலுவலக வேலை நாள்களில் மாவட்ட வேலைவாய்ப்பகம் அல்லது இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 168, முகமதியா நகா் (எபினேசா் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல்வலசை அஞ்சல், தென்காசி என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

செங்கோட்டை சித்தா் கோயிலில் 140-ஆவது குருபூஜை

தென்காசி மாவட்டம், செங்கோட்டை உண்டாற்று கரையில் சித்தா் ஆறுமுகசாமி ஜீவசமாதியில் 140-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 140-ஆவது குருபூஜையை முன்னிட்டு, மூன்று நாள்கள் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அன... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் திமுக பொதுக்கூட்டம்

சாம்பவா்வடகரை நகர திமுக மற்றும் இளைஞா் அணி சாா்பில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி முத்து தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நாலாயிரம் என்... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட சமரச மையங்களில் செப். 30 வரை சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, சமரச தீா்வு மையங்களில் செப். 30ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 1 முதல் தொடங்கிய இந்த சிறப்பு... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே காா்-ஜீப் மோதல்: 9 போ் காயம்

கடையநல்லூா் அருகே ஜீப்பும், காரும் புதன்கிழமை மோதிக் கொண்டதில் புதுமண தம்பதி உள்பட 9 போ் காயம் அடைந்தனா். செங்கோட்டை அருகேயுள்ள வல்லத்தை சோ்ந்தவா் அபிலேஷ் மாா்ட்டின்(29). இவருக்கும், கோவிலூா் பகுதிய... மேலும் பார்க்க

ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் ஆஷாடன நவராத்திரி விழா நடைபெற்றது. சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் இத்திருவிழா கடந்த ஜூன் 25ஆம் தேதி த... மேலும் பார்க்க

ஜூலை 19இல் குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்- ஆட்சியா் தகவல்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா ஜூலை 19-27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தென்காசியில் செய்தியாளா்களிடம் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் புதன்கிழமை கூறியதாவது: குற்றாலத்... மேலும் பார்க்க