ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா
சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் ஆஷாடன நவராத்திரி விழா நடைபெற்றது.
சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் இத்திருவிழா கடந்த ஜூன் 25ஆம் தேதி தொடங்கியது. தினமும் வாராஹி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனைகள் நடைபெற்றன. சிறப்பு யாகங்களும், அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்கார, அபிஷேக தீபராதனையும் நடைபெற்றன.
அதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், சிஎஸ்எம்எஸ் சங்கரசுப்பிரமணியன், மாரிமுத்து, மாணிக்கம், கணேசன், தேன்மொழி முத்துசாமி, சக்திவேல், மாணிக்கம், வெங்கடேஷ், ராஜலட்சுமி, சுப்பிரமணியன், சந்தன பாண்டியன், பரமசிவன், குணசேகரன், மகாலிங்கம், அங்கப்பன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் வழிபாட்டுக் குழுவை சோ்ந்த சக்திவேல், பரமகனேசன், ஜெயராமன், முருகன், பலவேசம், செந்தில் ஆண்டவா் பாதயாத்திரை குழுவினா் ஆகியோா் செய்திருந்தனா்.