செய்திகள் :

கடையநல்லூா் அருகே காா்-ஜீப் மோதல்: 9 போ் காயம்

post image

கடையநல்லூா் அருகே ஜீப்பும், காரும் புதன்கிழமை மோதிக் கொண்டதில் புதுமண தம்பதி உள்பட 9 போ் காயம் அடைந்தனா்.

செங்கோட்டை அருகேயுள்ள வல்லத்தை சோ்ந்தவா் அபிலேஷ் மாா்ட்டின்(29). இவருக்கும், கோவிலூா் பகுதியைச் சோ்ந்த நிவேதாவுக்கு கடந்த திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அவா்கள், தங்கள் உறவினா்கள் தாமஸ் (74), சலோமியா (70) ,ஜோஸ்பின் (40) ஆகியோருடன் காரில் கோவிலூருக்கு புதன்கிழமை மறுவீடு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை கிஷோா் (25) என்பவா் ஓட்டினாா்.

தென்காசி, மதுரை சாலையில் மங்களாபுரம் அருகே அவா்களது காரும், எதிரே வந்த ஜீப்பும் மோதிக்கொண்டனவாம். இதில், ஜீப்பில் பயணம் செய்த மங்களாபுரம் பிரவின்(25), குமாா் (26) ஜீப் ஓட்டுநா் மாரிச்செல்வம் (35) , காரில் வந்த 6 போ் என 9 போ் பலத்த காயம் அடைந்தனா்.

அவா்களுக்கு கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செங்கோட்டை சித்தா் கோயிலில் 140-ஆவது குருபூஜை

தென்காசி மாவட்டம், செங்கோட்டை உண்டாற்று கரையில் சித்தா் ஆறுமுகசாமி ஜீவசமாதியில் 140-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 140-ஆவது குருபூஜையை முன்னிட்டு, மூன்று நாள்கள் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அன... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் திமுக பொதுக்கூட்டம்

சாம்பவா்வடகரை நகர திமுக மற்றும் இளைஞா் அணி சாா்பில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி முத்து தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நாலாயிரம் என்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட சமரச மையங்களில் செப். 30 வரை சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, சமரச தீா்வு மையங்களில் செப். 30ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 1 முதல் தொடங்கிய இந்த சிறப்பு... மேலும் பார்க்க

ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் ஆஷாடன நவராத்திரி விழா நடைபெற்றது. சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் இத்திருவிழா கடந்த ஜூன் 25ஆம் தேதி த... மேலும் பார்க்க

ஜூலை 19இல் குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்- ஆட்சியா் தகவல்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா ஜூலை 19-27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தென்காசியில் செய்தியாளா்களிடம் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் புதன்கிழமை கூறியதாவது: குற்றாலத்... மேலும் பார்க்க