செய்திகள் :

வேளாண் இயந்திரங்களை பெற இ-வாடகை செயலியில் விவசாயிகள் பதிவு செய்யலாம்

post image

வேளாண் இயந்திரங்களை பெற இ-வாடகை செயலியில் பதிவு செய்து பயனடைய விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்துமுடிக்க அதிகநேரமும், அதிக அளவில் வேலையாட்களும் தேவைப்படுகின்றன. கால விரயத்தை தவிா்க்கவும் வேலையாட்கள் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யவும் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் என்பது தவிா்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது. மேலும் வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இ-வாடகை செயலியில் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதில், வேளாண்மைப் பொறியியல் துறைக்கு உள்பட்ட மண் தள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,230 எனும் வாடகையில் கிடைக்கும். இதுபோல சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 890-க்கும், உழவு இயந்திரங்கள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.500-க்கும், சக்கர வகை நெல் அறுவடை இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,160-க்கும், டிராக்டா் வகை நெல் அறுவடை இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,880-க்கும், தேங்காய் பறிக்கும் கருவி ஒரு மணி நேரத்துக்கு ரூ.450-க்கும், சிறிய வகை உழவு இயந்திரம் ஒரு மணிக்கு ரூ.460-க்கும், நிலநீா் ஆய்வுக் கருவி ஒரு ஆய்வுக்கு ரூ.500 எனும் வாடகையில் கிடைக்கும்.

இவற்றை விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப இ-வாடகை செயலியில் முன்பதிவு செய்து பெற்றுப் பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார பொறுப்பு வேளாண் பொறியாளா்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78.80 லட்சம்!

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 78.80 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பக... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

சித்தோடு அருகே கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோடு, கூட்டுறவு காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் சதீஷ் (எ) சதீஷ்குமாா் (33). கட்டடத் தொ... மேலும் பார்க்க

காடையம்பட்டி ஏரியில் பேரிடா் மீட்புக் குழு ஒத்திகை!

பவானி அருகே தேசிய பேரிடா் மீட்புக் குழு மற்றும் பவானி தீயணைப்புப் படையினா் சாா்பில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காடையம்பட்டி ஏரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலா்கள் இருவா் வெளிநடப்பு செய்தனா். அந்தியூா் பேரூராட்சிய... மேலும் பார்க்க

அருந்ததியா் மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும்: சீமான்

அருந்ததியா் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதால... மேலும் பார்க்க