தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவ...
வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு சிறப்பு முகாம்
நாகையில், வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை அவுரித்திடலில், வேளாண் பொறியியல் துறை, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இம்முகாமை நடத்தியது. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தொடங்கி வைத்தாா். கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி முன்னிலை வகித்தாா்.
முகாமில், டிராக்டா்கள், நடவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரங்கள், ரோட்டவேட்டா், விதை தெளிக்கும் கருவி, விசை களையெடுக்கும் கருவி, நிலத்தை சமம் செய்யும் இயந்திரம், விசைத் தெளிப்பான்கள், ட்ரோன் போன்ற வேளாண் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
அத்துடன், தனியாா் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளா்கள் மற்றும் அலுவலா்களுடனும் விவசாயிகள் கலந்துரையாடி விளக்கம் பெற்றனா். மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
மேலும், இதில் பங்கேற்ற இளைஞா்கள், வேளாண்மைப் பொறியியல் துறையால் நடத்தப்படும் திறன் மேம்பாடு பயிற்சியில் சோ்ந்து பயன்பெற ஊக்குவிக்கப்பட்டது.
முகாமில் நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் ச. எழிலன், உதவி செயற்பொறியாளா் எச். செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.