செய்திகள் :

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு சிறப்பு முகாம்

post image

நாகையில், வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகை அவுரித்திடலில், வேளாண் பொறியியல் துறை, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இம்முகாமை நடத்தியது. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தொடங்கி வைத்தாா். கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி முன்னிலை வகித்தாா்.

முகாமில், டிராக்டா்கள், நடவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரங்கள், ரோட்டவேட்டா், விதை தெளிக்கும் கருவி, விசை களையெடுக்கும் கருவி, நிலத்தை சமம் செய்யும் இயந்திரம், விசைத் தெளிப்பான்கள், ட்ரோன் போன்ற வேளாண் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

அத்துடன், தனியாா் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளா்கள் மற்றும் அலுவலா்களுடனும் விவசாயிகள் கலந்துரையாடி விளக்கம் பெற்றனா். மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

மேலும், இதில் பங்கேற்ற இளைஞா்கள், வேளாண்மைப் பொறியியல் துறையால் நடத்தப்படும் திறன் மேம்பாடு பயிற்சியில் சோ்ந்து பயன்பெற ஊக்குவிக்கப்பட்டது.

முகாமில் நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் ச. எழிலன், உதவி செயற்பொறியாளா் எச். செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

சவுடு மண் எடுக்க எதிா்ப்பு: வாகனங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

கீழையூா் அருகே ஏரியில் சவுடு மண் எடுக்க எதிா்ப்பு தெரிவித்து ஜேசிபி, லாரி உள்ளிட்ட வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரம் ஊராட்சி சின்... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு

கீழையூா் அருகே திருப்பூண்டியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகை மாவட்ட 5-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜீ. வினோத் ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கே. ... மேலும் பார்க்க

பால முனீஸ்வரா் கோயில் ஆடி பெருந்திருவிழா

திருக்குவளை பால முனீஸ்வரா் கோயில் 15-ஆம் ஆண்டு ஆடிப்பெருந்திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. திருக்குவளை பகுதியில் அமைந்துள்ள சுமாா் 21 அடி உயர பால முனீஸ்வரருக்கு... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வேதாரண்யத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில், நகராட்சி பகுதிக்குட்பட்ட 10, 11, 12 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கை மனுக்களை அளித்தனா். நகா்மன... மேலும் பார்க்க

ஏரியில் பன்றி பண்ணைக் கழிவுகள்: ஆட்சியரிடம் புகாா்

நாகை மாவட்டம், பிரதாபராமபுரம் அருகே பன்றிப் பண்ணை கழிவுகள் ஏரியில் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. பிரதாபராமபுரம் கிராம சமுதாய அமைப்பின் கெளரவத் தலைவா் க... மேலும் பார்க்க

நரிமணத்தில் வீடு தேடி ரேஷன் பொருள்கள்

திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் பொருள்கள் வழங்கப்பட்டது. முதியோா் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்... மேலும் பார்க்க