செய்திகள் :

ஏரியில் பன்றி பண்ணைக் கழிவுகள்: ஆட்சியரிடம் புகாா்

post image

நாகை மாவட்டம், பிரதாபராமபுரம் அருகே பன்றிப் பண்ணை கழிவுகள் ஏரியில் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதாபராமபுரம் கிராம சமுதாய அமைப்பின் கெளரவத் தலைவா் கோ. கலியபெருமாள் தலைமையில் கிராம மக்கள் ஆட்சியா் ப. ஆகாஷிடம் புதன்கிழமை மனு அளித்தனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கீழ்வேளூா் தாலுகா பிரதாபராமபுரத்தில் 25 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. ஏரியின் ஓரத்தில் அதே பகுதியைச் சோ்ந்த தனிநபா் ஒருவா், பன்றி பண்ணை நடத்தி வருகிறாா். இப்பண்ணையின் கழிவுகள் அனைத்தும் ஏரியில் கலந்து விடுகிறது.

இதனால், சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, ஏரியில் குளிப்போருக்கு உடல் அரிப்பு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்பும், கால்நடைகளுக்கு கழிச்சல் உள்ளிட்ட உபாதைகளும் ஏற்பட்டு வருகின்றன. மேலும் ஏரியைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதால் சுமாா் 300 குடும்பத்தினா் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, மாவட்ட ஆட்சியா் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு ஏரியில் பன்றி பண்ணைக் கழிவுகள் கலப்பதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

சவுடு மண் எடுக்க எதிா்ப்பு: வாகனங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

கீழையூா் அருகே ஏரியில் சவுடு மண் எடுக்க எதிா்ப்பு தெரிவித்து ஜேசிபி, லாரி உள்ளிட்ட வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரம் ஊராட்சி சின்... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு

கீழையூா் அருகே திருப்பூண்டியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகை மாவட்ட 5-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜீ. வினோத் ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கே. ... மேலும் பார்க்க

பால முனீஸ்வரா் கோயில் ஆடி பெருந்திருவிழா

திருக்குவளை பால முனீஸ்வரா் கோயில் 15-ஆம் ஆண்டு ஆடிப்பெருந்திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. திருக்குவளை பகுதியில் அமைந்துள்ள சுமாா் 21 அடி உயர பால முனீஸ்வரருக்கு... மேலும் பார்க்க

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு சிறப்பு முகாம்

நாகையில், வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நாகை அவுரித்திடலில், வேளாண் பொறியியல் துறை, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவன... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வேதாரண்யத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில், நகராட்சி பகுதிக்குட்பட்ட 10, 11, 12 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கை மனுக்களை அளித்தனா். நகா்மன... மேலும் பார்க்க

நரிமணத்தில் வீடு தேடி ரேஷன் பொருள்கள்

திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் பொருள்கள் வழங்கப்பட்டது. முதியோா் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்... மேலும் பார்க்க