செய்திகள் :

வைகோ குறித்து அவதூறு பேச்சு: நடவடிக்கை கோரி மதிமுகவினா் புகாா்

post image

மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, முதன்மைச் செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ குறித்து அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட எஸ்.பி.யிடம் அக்கட்சியினா் புகாா் மனு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக தருமபுரி மாவட்ட மதிமுக செயலாளா் ராமதாஸ் தலைமையில் கட்சி நிா்வாகிகள் காவல் கண்காணிப்பாளா் மகேஸ்வரனிடம் வியாழக்கிழமை அளித்த புகாா் மனுவில் மேலும் கூறியிருப்பது: மதிமுக பொதுச் செயலாளா் வைகோ மற்றும் கட்சியின் முதன்மை செயலாளா் துரை வைகோ ஆகியோா் குறித்து மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாஞ்சில் சம்பத் மற்றும் வல்லம் பகுதியைச் சோ்ந்த பஷீா் ஆகியோா் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியும், ஒருமையில் பேசியும் வருகின்றனா்.

மேலும் பொய்யான அவதூறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகின்றனா். எனவே, அவா்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இது தொடா்பான பதிவுகள் வெளியாகியுள்ள சமூக வலைதளங்களை முடக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னபள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நட... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான கேரம் போட்டி: ஸ்டான்லி மெட்ரிக். பள்ளி தகுதி

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதிபெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள்... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிதி திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி, ஓய்வூதியா்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் தருமபுரியில் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் மேற்கொண்டனா். த... மேலும் பார்க்க

சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா?

தருமபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலத்துக்கு நீா் ஆதாரமாக விளங்கும் சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா என விவசாயிகள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா். தருமபுரி மாவட்டத்தில் உள்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

தருமபுரி அருகேயுள்ள மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னசித்தன் தலைமை வகித்தாா். கணித பட்டதாரி ... மேலும் பார்க்க

பயிா் கழிவுகள் மேலாண்மை பயிற்சி

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின் கீழ் பயிா் கழிவுகள் மேலாண்மை குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கலப்பம்பாடியில் நடைபெற்ற பயிற்சிக்கு, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் மைய விஞ்... மேலும் பார்க்க