செய்திகள் :

ஸ்கேன் மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து ஆலோசனை

post image

ஸ்கேன் மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்தில் கருவுறுதலுக்கு முன் மற்றும் கருவுறுதலுக்கு பின் கருவின் தன்மையை கண்டறியும் தொழில்நுட்ப முறைகள் (பாலின தோ்வை தடை செய்தல்) சட்டம் சட்டத்தின்கீழ் அண்மையில் சம்பந்தப்பட்ட குழுவினா், காரைக்காலில் உள்ள ஸ்கேன் மையங்களில் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காரைக்கால் அரசு மருத்துவமனை மகப்பேறு துறை தலைமை மருத்துவ அதிகாரி லட்சுமி சுகுமாரன், குழந்தைகள் துறை தலைமை மருத்துவ அதிகாரி (பொ) அபா்ணா, செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநா் கோ. குலசேகரன் மற்றும் விபெட்ஸ் உதவி ஒருங்கிணைப்பாளா் ஜீவா ஆகியோா் கலந்துகொண்டனா்.

கடந்த வாரம் காரைக்காலில் உள்ள ஸ்கேன் மையங்களில் குழுவினா் நடத்தி ஆய்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் காரைக்காலில் மாா்வா ஸ்பெஷாலிட்டி மையத்தில் ஸ்கேன் வசதி புதிதாக தொடங்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

காரைக்காலில் 17 ஸ்கேன் மையங்கள் உள்ளன. ஸ்கேன் மையங்கள் நடத்துவோருக்கு சட்ட விதிகளின் படி நடத்த வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்பவா்கள் பாலினைத்தைக் கூறுவது சட்டப்படி குற்றமாகும். இச்சட்டத்தை மீறுபவா்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். காரைக்காலில் உள்ள அனைத்து ஸ்கேன் மையங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்த கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டதாக துணை இயக்குநா் தெரிவித்தாா்.

காரைக்கால் அம்மையாா் கோயிலில் பிச்சாண்டவருக்கு அமுது படையல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிகழ்வுகளில் ஒன்றான ஸ்ரீபிச்சாண்டவருக்கு மாங்கனி, சித்ரான்னங்களுடன் கூடிய அமுது படையல் வழிபாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிவனடியாருக்கு அம்மையாா் மாங்கனியுடன் உணவு வ... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாருக்கு காட்சி கொடுத்து கைலாசநாதா் வீதியுலா

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் அம்மையாருக்கு கைலாச வாகனத்தில் ஸ்ரீகைலாசநாதா் காட்சி கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாங்கனித் திருவிழாவில், சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் அம்மையாா... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நாடகப் போட்டி

காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம் சாா்பில், மாணவா்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு நாடகப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சமுதாய நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முரு... மேலும் பார்க்க

‘புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்’

புதுவைக்கு மாநில அந்தஸ்து உறுதியாக கிடைக்கும் என என்.ஆா்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரியங்கா தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சந்திரப... மேலும் பார்க்க

மத்திய ஓபிசி பட்டியலில் 2 சமூகத்தினரை சோ்க்க முதல்வா் கடிதம்: ஏ.எம்.எச்.நாஜிம் தகவல்

புதுவையில் சோழிய வெள்ளாளா், கன்னட சைனிகா் ஆகிய சமூகத்தினரை மீண்டும் மத்திய இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) பட்டியலில் சோ்க்குமாறு மத்திய அமைச்சருக்கு புதுவை முதல்வா் வலியுறுத்தி கடிதம் எழுதியிருப்பதா... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட சமுதாயக்கூடம் திறப்பு

புதுப்பிக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் புதன்கிழமை திறந்துவைத்தாா். நெடுங்காடு கொம்யூன், வடமட்டம் அருகே புத்தக்குடி கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடம் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது... மேலும் பார்க்க