செய்திகள் :

ஸ்டாலினால் பாஜக-வில் கராத்தே தியாகராஜன் எழுப்பிய கேள்வி... நயினார் நாகேந்திரன் அளித்த பதில் என்ன?

post image
ஒரு வாரத்துக்கு முன்பு, திருநெல்வேலியில் நலத்திட்டப் பணிகள் தொடங்கிவைக்கும் அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், பாஜக-வைச் சேர்ந்த திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், ``தென்மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளானபோது இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் வந்தார்கள். ஆனால், உடனடியாக இடைக்கால நிதியுதவி கூட செய்யவில்லை. நயினார் நாகேந்திரனுக்கும் உண்மை தெரியும். நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகுதான் வெள்ள நிவாரண நிதியை அறிவித்தார்கள். அதுவும், நாம் கேட்டது ரூ. 34 ஆயிரம் கோடி. ஆனால், வெறும் ரூ. 276 கோடியைத்தான் ஒன்றிய அரசு கொடுத்தது.

திருநெல்வேலி நிகழ்ச்சி - முதல்வர் ஸ்டாலின்
திருநெல்வேலி நிகழ்ச்சி - முதல்வர் ஸ்டாலின்

சரி, பட்ஜெட்டிலாவது நாம் கேட்ட நிதியை ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்த்தோம், அதுவும் இல்லை. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள். ஒன்றிய பாஜக அரசு மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது. தேர்தல் சமயத்தில் மட்டும் இங்கு வருகிறார்கள். திருநெல்வேலி அல்வாவை விட, மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தருகின்ற அல்வாதான் ஃபேமஸாக இருக்கிறது." என்று மத்திய பாஜக அரசை விமர்சித்திருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றிய, பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன், ``முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி கூட்டத்தில் பிரதமரையும், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டையும் விமர்சித்துப் பேசினார். அப்போது, நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறவில்லை. குறைந்தபட்சம் ஏன் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை" என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இந்த நிலையில், கராத்தே தியாகராஜன் பேசியது குறித்து இன்று தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு நயினார் நாகேந்திரன், ``இதைப்பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது. சபை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறது." என்று தற்போது பதிலளித்திருக்கிறார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

"கிரவுண்டுக்கு வேண்டாம்; குறிஞ்சிக்கு வந்துடுங்க..." - திமுக அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி!

கிரிக்கெட் போட்டி!தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் வரும் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக தி.மு.க விளையாட்டு மேம்பட்டு அணியின் சார்பில் தி.மு.க... மேலும் பார்க்க

செங்கோட்டையன் போர்க்கொடி... வாரிவிடும் ஐகோர்ட் தீர்ப்பு... நெருக்கடியில் சிக்கிய எடப்பாடி?

சமீபத்தில் கோவையில் அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்... மேலும் பார்க்க

Victoria Hall: வேகமெடுக்கும் சென்னை விக்டோரியா பொதுக்கூடம் புதுப்பிப்புப் பணிகள்! | Photo Album

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!https://tinyurl.com/Velpari-Vikatan-Play மேலும் பார்க்க

M.K.Stalin: `எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும்...' - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு ஒரு மடலை எழுதியிருக்கிறார். அதில், 'அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட உருவ முடியாது.' எனக் கூறியிருக்கிறார்.ஸ்டாலின்தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வழங்கிய ஆட்சியை அவ... மேலும் பார்க்க

கண்ணியமற்ற `நாடு கடத்தல்’ - தென் அமெரிக்க நாடுகளிடம் இந்தியாவுக்கான பாடம் என்ன?

நாடு கடத்தல் டொனால்டு ட்ரம்ப் கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார். முறையான ஆவணங்கள் இல்லாத 15 லட்சம் பேர் அடங்கிய பட்டியல... மேலும் பார்க்க

'விஜய்யை பாஜக இழுக்க பார்க்கிறதா?' - 'Y' பிரிவு பாதுகாப்புப் பற்றி கே.பி.முனுசாமி விமர்சனம்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்க்கு வழங்கப்பட்டிருக்கும் 'Y' பிரிவு பாதுகாப்பை பற்றி வ... மேலும் பார்க்க