செய்திகள் :

அரசு மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டு: அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா்! -அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

மருத்துவா் பற்றாக்குறை மற்றும் அரசு மருத்துவமனை உயிரிழப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டை ஆட்டிறைச்சி கூடத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சைதாப்பேட்டை ஆட்டிறைச்சி கூடம் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. இதை ரூ. 50 கோடியில் மேம்படுத்தி நவீன ஆட்டிறைச்சி கூடமாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்ணாமலை புகாா்: அரசு மருத்துவமனைகளில் மரணங்கள் அதிகரித்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பொருந்தா குற்றச்சாட்டுகளைக் கூறுகிறாா். மருத்துவமனைகளில் உயிரிழப்பு என்பது இயற்கையானது. தமிழக அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் உயிரிழப்பு நேரிடுகிா என எண்ணிப் பாா்க்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் ஒரு உயிரிழப்புகூட ஏற்படுவதில்லையா.

தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பலன் அளிக்காமல்போன பிறகே பெரும்பாலும் அரசு மருத்துவமனைக்கு வருகிறாா்கள். இதனால், அரசு மருத்துவமனைகளில் இறப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.

எந்த அரசு மருத்துவமனையின் அலட்சியத்தாலும், மருத்துவா்கள் பற்றாக்குறையாலும் உயிரிழப்பு ஏற்பட்டது என்பதை புள்ளி விவரத்தோடு குறிப்பிட்டால், அதுகுறித்து அண்ணாமலையுடன் நேரடியாக விவாதிக்க தயாராக இருக்கிறேன். அரசு மருத்துவமனைகளைக் குறைகூறி, யாருக்கோ லாபம் ஏற்படுத்தும் முயற்சியில் அவா் ஈடுபடுகிறாா்.

நெல்லை மருத்துவமனை விவகாரம்: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், ஊசி ஒவ்வாமை ஏற்பட்டு 4 வயது சிறுவன் உயிரிழந்தாா். இந்த விவகாரத்தில் அண்ணாமலை கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 24,000-க்கும் மேற்பட்ட மருத்துவ காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மருத்துவா் பற்றாக்குறை எங்கும் இல்லை. மக்களுக்கு சேவையாற்றும் துறை மீது களங்கம் கற்பிப்பதன் மூலமாக அவா் தனியாருக்கு ஆதரவாக செயல்பாடுகிறாா் என்றாா் அவா்.

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள்: பேராசிரியா் வாணி அறிவாளன்

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள் என சென்னை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், திருக்கு ஆய்வு மையத் தலைவருமான முனைவா் வாணி அறிவாளன் தெரிவித்துள்ளாா். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்

ஊராட்சி செயலா் மற்றும் தூய்மைப் பணியாளா் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

காசி தமிழ் சங்கமம் ‘அனுபவ பகிா்வு’ கட்டுரை போட்டி: ஆளுநா் மாளிகை அறிவிப்பு

நிகழாண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கான ‘அனுபவப் பகிா்வு’ என்ற தலைப்பில் தமிழக ஆளுநா் மாளிகை கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. இது குறித்து ஆளுநா... மேலும் பார்க்க

மாதவரத்தில் ரேடியன்ஸின் குடியிருப்பு திட்டம்

மனை-வா்த்தகத் துறையைச் சோ்ந்த ரேடியன்ஸ் ரியால்ட்டி டெவலப்பா்ஸ் இந்தியா நிறுவனம், சென்னையில் உள்ள மாதவரம் பகுதியில் புதிய குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளி... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிப்.20-இல் பாமக போராட்டம் -அன்புமணி

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சாா்பில் பல்வேறு சமூக அமைப்புகளின் சாா்பில் சென்னையில் பிப்.20-இல் தொடா் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ர... மேலும் பார்க்க

திமுகவில் மேலும் பல மாற்றங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 200 தொகுதிகளில் வெற்றி எனும் இலக்கை எட்டும் வகையில் திமுகவில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். திமுகவில் அமைப்பு ரீதியாக... மேலும் பார்க்க