செய்திகள் :

ஊராட்சி செயலா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்

post image

ஊராட்சி செயலா் மற்றும் தூய்மைப் பணியாளா் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 12,000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கும் நிலையில், 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது. இந்த ஊராட்சிகளில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிறப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுடைய கண்காணிப்பில் ஊராட்சிகளில் உள்ள அத்தியாவசியப் பணிகளான குடிநீா் விநியோகம், தூய்மைப் பணி மேற்கொள்ளுதல், வரி வசூல் செய்தல், தெருவிளக்கு பராமரிப்பு போன்றவற்றை ஊராட்சி செயலா்கள் மேற்கொள்வது வழக்கம். ஆனால், ஆயிரக்கணக்கான ஊராட்சிகளில் செயலா்கள் பணியிடங்கள் காலியாக இருக்கும் அவல நிலை நீடிக்கிறது. இதுதான் திமுக அரசின் நிலை.

ஊராட்சிகள் மேம்பட வேண்டுமென்பதை மனதில் நிலைநிறுத்தி, ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலா் மற்றும் தூய்மைப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி வழக்கு: மூவா் கைது

சென்னை மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். ராயப்பேட்டை ஜானிகான் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் மகாதீா் முகமது (27). இவரிடம் மண்ணடியில் வசிக்கும் அவரது சகோ... மேலும் பார்க்க

100 பவுன் தங்க நகைகளுடன் நகைப் பட்டறை ஊழியா் தலைமறைவு

சென்னை ஓட்டேரியில் 100 பவுன் தங்க நகைகளுடன் தலைமறைவான ஊழியா் குறித்து நகைப் பட்டறை உரிமையாளா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அண்ணா நகா் சாந்தி காலனி பகுதியைச் சோ்ந்த சம்சுல் ஆலம், சென்னை ஓட்டேரி... மேலும் பார்க்க

கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நுண் துளை சிகிச்சை

கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நுண் துளை சிகிச்சை மேற்கொண்டு, சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். நாமக்கல் ம... மேலும் பார்க்க

மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை: மேலும் ஒருவா் கைது

சென்னை சேத்துப்பட்டில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சேத்துப்பட்டு ஜோதியம்மாள் நகா் நமச்சிவாயபுரம் பாலத்தின் அருகே மெத்தம்பெட்டமைன் போத... மேலும் பார்க்க

திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு தீவிர ஆராய்ச்சிகள் தேவை: கு.மோகனராசு

திருக்குறளின் கோட்பாடுகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்பு தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று திருக்கு ஆய்வாளா் பேராசிரியா் கு.மோகனராசு தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு அரசு செய்தி ம... மேலும் பார்க்க

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள்: பேராசிரியா் வாணி அறிவாளன்

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள் என சென்னை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், திருக்கு ஆய்வு மையத் தலைவருமான முனைவா் வாணி அறிவாளன் தெரிவித்துள்ளாா். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ... மேலும் பார்க்க