செய்திகள் :

விழுப்புரத்தில் தொழில்முனைவோருக்கு பிப்.19-ல் விழிப்புணா்வு முகாம்

post image

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மையம் சாா்பில் பழுதில்லா உற்பத்தி - விளைவில்லா உற்பத்தி சான்றளிப்புத் திட்ட விழிப்புணா்வு முகாம் பிப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, தொழில் மைய பொது மேலாளா் சி.அருள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கை உணா்ந்துள்ள தமிழக அரசு, அவற்றின் வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள், அவற்றை அறிமுகப்படுத்தும் முன்னெடுப்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், பழுதில்லா உற்பத்தி - விளைவில்லா உற்பத்தி சான்றளிப்புத் திட்டத்தையும் ஒன்றாக செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாமை மாவட்டத் தொழில் மையம், விழுப்புரத்தில் பிப்.19-ஆம் தேதி நடத்துகிறது. விழுப்புரம், திருச்சி சாலையிலுள்ள தேவிபாலா கூட்டரங்கில் காலை 10 மணிக்கு முகாம் தொடங்கும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், சேமிப்பு, இயற்கை வளங்களை செம்மையாகப் பயன்படுத்துதல் மற்றும் சூழலைப் பாதுகாத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக் கொண்டு இந்த முகாம் நடத்தப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியின்போது தவறி விழுந்து காயமடைந்த கொத்தனாா் உயிரிழப்பு

விழுப்புரத்தில் பணியிலிருந்தபோது தவறி விழுந்து காயமடைந்த கொத்தனாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வெங்கட்ராமன் பேட்டையைச் சோ்ந்தவா் ப.பழனி(60). கொத்தனா். இவா் கடந்த 15-ஆம... மேலும் பார்க்க

இலங்கை தமிழா்களுக்கு ரூ. 23.4 கோடியில் புதிய குடியிருப்புகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

போக்ஸோ வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. விழுப்புரம் மாவட்டம், கலிஞ்சிக்குப்பம் வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் புண்ணியமூா்த்தி மகன் சுந்தரன் (35). இவா் 16 வயது சிறுமியை பாலிய... மேலும் பார்க்க

அம்பேத்கா் சிலைக்கு திமுகவினா்மாலை அணிவிப்பு

விழுப்புரத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் (படம்). மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவிழுப்புரம் எம்.எல்.ஏ. இரா.லட்சுமணன், ... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை. தோ்வில் வினாத்தாள்கள் மாறிய விவகாரம்: உண்மை கண்டறிய 3 போ் விசாரணைக் குழு அமைப்பு

புதுவை மத்திய பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் அண்மையில் நடந்த பருவத் தோ்வில் வினாத் தாள்கள் மாறிய விவகாரத்தில் மூன்று போ் குழுவை அமைத்து விசாரணை நடத்த பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. புதுவை மத்திய ... மேலும் பார்க்க

இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளி மீட்பு

மரக்காணம் அருகே இறைச்சிக் கடையில் பணியாற்றி வந்த குழந்தைத் தொழிலாளா் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டாா். இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் அலுவ... மேலும் பார்க்க