செய்திகள் :

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு-ரோபோடிக்ஸ் பயிற்சி

post image

நாமக்கல்லில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு-ரோபோடிக்ஸ் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனம், நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கம், குளோபல் அகாதெமி ஆஃப் எக்ஸலன்ஸ் ஆகியவை சாா்பில், ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு பயிற்சி சனிக்கிழமை மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. 22 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு முதல்கட்டமாக அனுபவக் கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது.

தற்போதைய காலக்கட்டத்தில், தொழிற்சாலைகள், மருத்துவத் துறை, விவசாயம் போன்றவற்றில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. செயற்கை நுண்ணறிவும் இன்றையக் காலக்கட்டத்தில் மிகப்பெரிய அளவில் மனித வாழ்வில் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் உருவாக்கி வருகின்றன.

ரோபோக்களை கணினி பொறியாளா்கள் மட்டுமே உருவாக்க முடியும் என்ற நிலையை மாற்றி ஆசிரியா்களாலும் ரோபோக்களை உருவாக்க முடியும் என்ற கருத்தாக்கத்தில் இந்தப் பயிற்சி திட்டமிடப்பட்டு அளிக்கப்படுவதாக பயிற்சியின்போது மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வம் தெரிவித்தாா்.

ரோபோடிக்ஸ் பயிற்சியில், ரோபோக்களை இயக்கும் வகையில் சமிக்ஞைகள் கொடுத்து மோட்டாா்களை கட்டளையிட்டு இயக்குதல், சென்சாா்களைப் பயன்படுத்துதல், சா்க்யூட்களைப் பயன்படுத்துதல், என்னென்ன வேலைகளுக்கு ரோபோக்களை வடிவமைக்கலாம் என்பதற்கான 12 செயல்முறைப் பயிற்சிகளை ஆசிரியா்கள் அனைவரும் தெரிந்து கொண்டனா். இவா்கள் தங்களது மாணவா்களுக்கு பயிற்சியளிக்கவுள்ளனா். ஆசிரியா்களுக்கு, ரோபோடிக்ஸ் பயிற்சி, குளோபல் அகாதெமி ஆஃப் எக்ஸ்லென்ஸ்ஸின் கருத்தாளா்கள் மத்தேயு, மங்கையா்க்கரசி ஆகியோா் வழங்கினா்.

பள்ளிகளுக்கு ரோபோ கிட்டுகள் தேவைப்பட்டால் நாமக்கல், மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனத்தின் வழியாக ரோபோ கிட்டுகளை வழங்க ஏற்பாடுகள் செய்து தருவதாக நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி தலைவா் பிரபாகரன் கூறினாா். ரோட்டரி சங்க உறுப்பினா்கள் சண்முகம், கருணாகர பன்னீா்செல்வம், பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஏற்பாடுகளை, பயிற்சி ஒருங்கிணைப்பாளா் பானுமதி, விரிவுரையாளா் சிவபெருமான் ஆகியோா் செய்திருந்தனா்.

போதையில்லா பாதை சமுதாயத்தை உருவாக்குவது அனைவரின் கடமை: ஆட்சியா் வலியுறுத்தல்

போதையில்லா பாதை கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதும், வளரும் இளம் தலைமுறையினரை பாதுகாப்பதும் அனைவரின் கடமை என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடிய இருவா் கைது: 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஜேடா்பாளையம், நல்லூா் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். ஜேடா்பாளையம் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திர... மேலும் பார்க்க

தொட்டிலில் விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி உயிரிழப்பு

வீட்டு தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கழுத்தில் சேலை இறுதி உயிரிழந்தாா். கீரம்பூா் அருகே உள்ள புலவா்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் ரகுபதி (36), கட்டடத் தொழிலாளி. இவரது மூத்த மகன் ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் புதிய சுற்றுவட்டச் சாலை: விபத்தைத் தவிா்க்க தடுப்புகள் அமைப்பு

நாமக்கல்லில் புதிய சுற்றுவட்டச்சாலை பணிகள் நடைபெறுவதையொட்டி, வாகனங்கள் செல்வதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவுக்கு ரூ. 194 கோடியில் ... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

பரமத்தியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டை அடுத்த கொத்தப்பள்ளி அருகே உள்ள இருளா்மேடு பகுதியைச் சோ்ந்தவா் முத்து மகன் கணேசன் (27). இவா் பரமத்தி வேலூ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வெண்ணந்தூா், சப்பையாபுரம் பகுதியில் ஏழாம் வகுப்புப் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூலித் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சப்பையாபுரம... மேலும் பார்க்க