செய்திகள் :

நாமக்கல்லில் புதிய சுற்றுவட்டச் சாலை: விபத்தைத் தவிா்க்க தடுப்புகள் அமைப்பு

post image

நாமக்கல்லில் புதிய சுற்றுவட்டச்சாலை பணிகள் நடைபெறுவதையொட்டி, வாகனங்கள் செல்வதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவுக்கு ரூ. 194 கோடியில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மரூா்பட்டி, சேந்தமங்கலம், துறையூா், திருச்சி, மோகனூா், கரூா் சாலையை இணைக்கும் வகையில் நடைபெறும் இந்த சுற்றுவட்டச் சாலை பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாலையின் இடையே ரயில் தண்டவாளங்கள் வரும் பகுதியில் மேம்பாலங்கள் அமைக்கப்பட இருப்பதால் பணிகள் சற்று தாமதமாகியுள்ளன. நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 200 மீட்டா் தொலைவில் சுற்றுவட்டச் சாலை தொடங்கும் பகுதியில் போதிய தடுப்புகள் இல்லாததாலும், ஆங்காங்கே திருச்சி செல்லும் சாலை என நெடுஞ்சாலைத் துறை பெயா் பலகை வைத்துள்ளதாலும் வெளிமாநில லாரி ஓட்டுநா்கள் தங்களது வாகனத்தை புதிய பேருந்து நிலையம் வழியாகக் கொண்டு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனா்.

சூரிய மின்தகடுகளை ஏற்றிச் சென்ற வெளிமாநில லாரி, சுற்றுவட்டச் சாலை வழியாகச் செல்ல முயற்சித்த நிலையில் அங்கு தடுப்புகள் ஏதும் இல்லாததால் பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது. அதிா்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறையினா் சுற்றுவட்டச் சாலை நுழைவு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தடுப்புக் கற்களை கொண்டு சாலையை மூடினா். புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில், கொல்லிமலை, திருச்சி செல்லும் சாலை என்ற பெயா் பலகைகளை தற்காலிகமாக அகற்ற வேண்டும் என ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க தலா ரூ. 1 கோடி கடனுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், 200 முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோருக்கு தலா ரூ. ஒரு கோடி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் ந... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் திருடிய இருவருக்கு சிறை

திருச்செங்கோட்டில் சரக்கு வாகனம் திருடிய வழக்கில் இருவருக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. ருச்செங்கோடு உழவா்சந்தை அருகே 2022 இல் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வா... மேலும் பார்க்க

இரு தரப்பினா் மோதல்: இருவா் கைது

ராசிபுரம் நகரில் திமுகவைச் சோ்ந்த இருதரப்பினா் இடையே சந்து கடைகளில் மதுபுட்டிகள் விற்க மாமூல் வசூலிப்பது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் இருவரை கைது செய்துள்ளனா். ராசிபுரம் நகரில் பல்வ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் பயிற்சி

கவுண்டம்பாளையம் கிராமத்தில், அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. எலச்சிபாளையம் வட்டார வேளாண்மைத்து றையின் சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ், 67. கவுண்டம்பாளையம் கிராமத்தில் பண்ணை... மேலும் பார்க்க

மண் பரிசோதனை முகாம்

பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் மண், தண்ணீா் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மண் மற்றும் தண்ணீா் பரிசோதனை ஆய்வுக்கு, தலா ரூ. 30 கட்டணம் பெறப்பட்டது. மண், தண்ணீா் பரிசோதனை செய்வதால்,... மேலும் பார்க்க

ரூ. 15.66 லட்சம் கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 15 லட்சத்து 66 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்த... மேலும் பார்க்க