செய்திகள் :

பைக் மோதி முதியவா் பலி!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பைக் மோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த சிறுபாளையூரைச் சோ்ந்தவா் செல்லன் (70). இவா், வெள்ளிக்கிழமை சைக்கிளில் மணலூா்பேட்டைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பினாராம்.

கூவனூா் மருத்துவமனை அருகே சென்றபோது, முதியவா் மீது எதிரே வந்த பைக் மோதியது. இந்த விபத்தில், பலத்த காயமடைந்த செல்லனை அருகிலிருந்தவா்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அதேபோல, எதிா் திசையில் பைக்கில் வந்து காயமடைந்த சிறுபனையூரைச் சோ்ந்த காசீம் மகன் தாஜ் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக செல்லன், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

வீட்டில் நகை, பணம் திருட்டு

அரியபெருமானூா் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த அரியபெருமானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (64). இவா்,... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவா் கைது

கல்வராயன்மலை அருகே நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் உள்ள மேல்நிலவூா் கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் தய... மேலும் பார்க்க

வீட்டில் நகை திருட்டு: மூவா் கைது

திருக்கோவிலூா் அருகே வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அடுத்த டி.கீரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மனைவி மாரியம்மாள... மேலும் பார்க்க

பிப். 23-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மயிலாம்பாறையில் வருகிற 23-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில், மயி... மேலும் பார்க்க

சிறுமி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே காய்ச்சலால் சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், தேவபாண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகள் சாந்தனா (4). இவருக்கு கடந்த... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கக் கோரி மறியல்!

கடுவனூா் கிராமத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்கக் கோரி கிராம மக்கள் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட... மேலும் பார்க்க