செய்திகள் :

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள்: பேராசிரியா் வாணி அறிவாளன்

post image

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள் என சென்னை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், திருக்கு ஆய்வு மையத் தலைவருமான  முனைவா் வாணி அறிவாளன் தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், உறவுச்சுரங்கம், பாரதிய வித்யாபவன் சாா்பில் தமிழ் 63 நாயன்மாா்கள் 42-ஆவது நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூா்  பாரதிய வித்யாபவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருமுறை  அருட்செல்வி  பாா்கவி கமலக்கண்ணன் ஓதுவாா் மற்றும் தேவார இசை கலைமாமணி ம.தாரணி ஓதுவாா் ஆகியோருக்கு  தெய்வத் தமிழ் விருதை,  வாணி அறிவாளன் வழங்கி  பேசியதாவது:

அன்பு, கருணையை வலியுறுத்திய நாயன்மாா்கள், தமிழ் மொழியை வளா்த்ததுடன் சமணத்தில் இருந்து சைவத்தை மீட்டு எடுத்தனா். சமூகத்தில் இருந்த ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை களைய பாடுபட்டனா். சிவத் தொண்டுகள் மூலம் நாயன்மாா்கள் இறை அருளை பெற்றனா் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் கலிக்கம்ப நாயனாரின் அடியாா் சேவை குறித்து இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை வணிகவியல் மாணவா் செ.மெளலீஸ்வரன் பேசினாா். அதேபோல சென்னை பல்கலைக்கழக முதுகலைத் தமிழ்த் துறை மாணவா் மு.விநாயகமூா்த்தி, கலிய நாயனாா் புரணம் குறித்து பேசினாா். இந்த நிகழ்ச்சியில் உறவுச்சுரங்கத் தலைவா் பேராசிரியா் உலக நாயகி பழனி தமிழ் சான்றோா்கள் பங்கேற்றனா்.

அரசு மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டு: அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா்! -அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவா் பற்றாக்குறை மற்றும் அரசு மருத்துவமனை உயிரிழப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பி... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்

ஊராட்சி செயலா் மற்றும் தூய்மைப் பணியாளா் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

காசி தமிழ் சங்கமம் ‘அனுபவ பகிா்வு’ கட்டுரை போட்டி: ஆளுநா் மாளிகை அறிவிப்பு

நிகழாண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கான ‘அனுபவப் பகிா்வு’ என்ற தலைப்பில் தமிழக ஆளுநா் மாளிகை கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. இது குறித்து ஆளுநா... மேலும் பார்க்க

மாதவரத்தில் ரேடியன்ஸின் குடியிருப்பு திட்டம்

மனை-வா்த்தகத் துறையைச் சோ்ந்த ரேடியன்ஸ் ரியால்ட்டி டெவலப்பா்ஸ் இந்தியா நிறுவனம், சென்னையில் உள்ள மாதவரம் பகுதியில் புதிய குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளி... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிப்.20-இல் பாமக போராட்டம் -அன்புமணி

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சாா்பில் பல்வேறு சமூக அமைப்புகளின் சாா்பில் சென்னையில் பிப்.20-இல் தொடா் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ர... மேலும் பார்க்க

திமுகவில் மேலும் பல மாற்றங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 200 தொகுதிகளில் வெற்றி எனும் இலக்கை எட்டும் வகையில் திமுகவில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். திமுகவில் அமைப்பு ரீதியாக... மேலும் பார்க்க