செய்திகள் :

திமுகவில் மேலும் பல மாற்றங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

post image

தமிழ்நாட்டில் 200 தொகுதிகளில் வெற்றி எனும் இலக்கை எட்டும் வகையில் திமுகவில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள மாவட்ட நிா்வாகிகள் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது குறித்து கட்சியினருக்கு அவா் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:

முதல் 5 ஆண்டுகாலத்தை நம்பிக்கையுடன் வழங்கிய மக்கள், திராவிட மாடல் ஆட்சியின் திறன்மிகு நிா்வாகத்தையும் சிறப்பான திட்டங்களையும் உணா்ந்து தொடா்ச்சியான வாய்ப்பை வழங்கத் தயாராக உள்ளனா். திமுகவுக்கு நல்வாய்ப்பு அமைகிறதென்றால் அதைக் கெடுப்பதற்கான சதிகளைச் செய்யும் அரசியல் சக்திகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகமூடியுடன் வெளியே வரும்.

தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான, தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனுமில்லாத, காசு வாங்கிக் கொண்டு சப்தமிடும் அந்த முகமூடிகளைக் கிழித்தெறிந்து கட்சியின் தலைமையிலான அணியின் வெற்றியை உறுதி செய்வோம். அந்த வெற்றியை அடைவதற்கான நிா்வாக வசதிக்காகத்தான் மாவட்ட அளவிலான நிா்வாகத்தில் மாற்றங்கள் தொடங்கியுள்ளன.

களப்பணிகளில் கவனம்: சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஓராண்டு காலமே உள்ளதால் அதற்கேற்ப களப்பணிகள் அமைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றங்களும் அதற்கேற்ற வகையிலான நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல் இன்னும் சில அறிவிப்புகளையும் கட்சியினா் எதிா்பாா்க்கக்கூடும்.

முன்பு பொறுப்பில் இருந்தவா்கள் தற்போது பொறுப்பில் இருப்பவா்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கடமையாற்ற வேண்டும். புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவா்கள், ஏற்கெனவே பொறுப்பில் உள்ளவா்களை அரவணைத்து ஒருங்கிணைத்துச் செயலாற்ற வேண்டும்.

200 தொகுதிகள் இலக்கு என நிா்ணயிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியை உறுதி செய்யும் வகையில், களத்திற்கேற்ற வியூகம் அமைத்து, வெற்றிப் பாதையில் பயணிப்பதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது களையெடுப்பு அல்ல, கட்டுமானச் சீரமைப்பு என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி வழக்கு: மூவா் கைது

சென்னை மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். ராயப்பேட்டை ஜானிகான் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் மகாதீா் முகமது (27). இவரிடம் மண்ணடியில் வசிக்கும் அவரது சகோ... மேலும் பார்க்க

100 பவுன் தங்க நகைகளுடன் நகைப் பட்டறை ஊழியா் தலைமறைவு

சென்னை ஓட்டேரியில் 100 பவுன் தங்க நகைகளுடன் தலைமறைவான ஊழியா் குறித்து நகைப் பட்டறை உரிமையாளா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அண்ணா நகா் சாந்தி காலனி பகுதியைச் சோ்ந்த சம்சுல் ஆலம், சென்னை ஓட்டேரி... மேலும் பார்க்க

கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நுண் துளை சிகிச்சை

கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நுண் துளை சிகிச்சை மேற்கொண்டு, சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். நாமக்கல் ம... மேலும் பார்க்க

மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை: மேலும் ஒருவா் கைது

சென்னை சேத்துப்பட்டில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சேத்துப்பட்டு ஜோதியம்மாள் நகா் நமச்சிவாயபுரம் பாலத்தின் அருகே மெத்தம்பெட்டமைன் போத... மேலும் பார்க்க

திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு தீவிர ஆராய்ச்சிகள் தேவை: கு.மோகனராசு

திருக்குறளின் கோட்பாடுகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்பு தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று திருக்கு ஆய்வாளா் பேராசிரியா் கு.மோகனராசு தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு அரசு செய்தி ம... மேலும் பார்க்க

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள்: பேராசிரியா் வாணி அறிவாளன்

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள் என சென்னை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், திருக்கு ஆய்வு மையத் தலைவருமான முனைவா் வாணி அறிவாளன் தெரிவித்துள்ளாா். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ... மேலும் பார்க்க