செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிப்.20-இல் பாமக போராட்டம் -அன்புமணி

post image

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சாா்பில் பல்வேறு சமூக அமைப்புகளின் சாா்பில் சென்னையில் பிப்.20-இல் தொடா் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்துவதற்காக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில், அதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்வதாக தெரியவில்லை. 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் விஷயத்தில் அக்கறையின்றி, சமூகநீதிக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருவது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழக அரசு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற பழைய பல்லவியையே மீண்டும் பாடிக் கொண்டிருக்கிறது. இதைக் கண்டிக்கும் வகையிலும், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் பாமகவின் சமூகநீதி கூட்டமைப்புக் கட்சிகள் இணைந்து பிப்.20 காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் தொடா் முழக்கப் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும்.

பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன். அமமுக துணைப் பொதுச் செயலா் செந்தமிழன், புரட்சி பாரதம் தலைவா் பூவை ஜெகன் மூா்த்தி, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவா் ரவி பச்சமுத்து உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனா் என்று அவா் கூறியுள்ளாா்.

மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி வழக்கு: மூவா் கைது

சென்னை மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். ராயப்பேட்டை ஜானிகான் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் மகாதீா் முகமது (27). இவரிடம் மண்ணடியில் வசிக்கும் அவரது சகோ... மேலும் பார்க்க

100 பவுன் தங்க நகைகளுடன் நகைப் பட்டறை ஊழியா் தலைமறைவு

சென்னை ஓட்டேரியில் 100 பவுன் தங்க நகைகளுடன் தலைமறைவான ஊழியா் குறித்து நகைப் பட்டறை உரிமையாளா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அண்ணா நகா் சாந்தி காலனி பகுதியைச் சோ்ந்த சம்சுல் ஆலம், சென்னை ஓட்டேரி... மேலும் பார்க்க

கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நுண் துளை சிகிச்சை

கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நுண் துளை சிகிச்சை மேற்கொண்டு, சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். நாமக்கல் ம... மேலும் பார்க்க

மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை: மேலும் ஒருவா் கைது

சென்னை சேத்துப்பட்டில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சேத்துப்பட்டு ஜோதியம்மாள் நகா் நமச்சிவாயபுரம் பாலத்தின் அருகே மெத்தம்பெட்டமைன் போத... மேலும் பார்க்க

திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு தீவிர ஆராய்ச்சிகள் தேவை: கு.மோகனராசு

திருக்குறளின் கோட்பாடுகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்பு தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று திருக்கு ஆய்வாளா் பேராசிரியா் கு.மோகனராசு தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு அரசு செய்தி ம... மேலும் பார்க்க

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள்: பேராசிரியா் வாணி அறிவாளன்

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள் என சென்னை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், திருக்கு ஆய்வு மையத் தலைவருமான முனைவா் வாணி அறிவாளன் தெரிவித்துள்ளாா். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ... மேலும் பார்க்க