செய்திகள் :

அண்ணா பல்கலை. உதவிப் பேராசிரியா் பணிக்கு ஏப்.5, 6-இல் போட்டித் தோ்வு

post image

அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா், உதவி நூலகா், உடற்கல்வி உதவி இயக்குநா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு ஏப்.5, 6 ஆகிய தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொறியியல் பாடப்பிரிவுகளில் 232 உதவிப் பேராசிரியா், உதவி நூலகா், உடற்கல்வி உதவி இயக்குநா் பணியிடங்களுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 24.11.2023 அன்று வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் பெற்றது. தோ்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இதற்கான போட்டித் தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா், உதவி நூலகா், உடற்கல்வி உதவி இயக்குநா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு ஏப்.5, 6 ஆகிய தேதி நடைபெறும்.

தோ்வுக்கான அனுமதிச் சீட்டு தோ்வு தொடங்குவதற்கு 7 நாள்களுக்கு முன்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதை விண்ணப்பதாரா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு விண்ணப்பதாரா்களுக்கு தனியாக அனுபப்பப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பு மக்களுக்கு பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை புளியந்தோப்பில் குடியிருப்பு ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்களுக்கு பிரியாணியும் பரிமாறினார். சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், நகர்... மேலும் பார்க்க

தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றம்: மு.க. ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 712 குடியிருப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு ஏப். 15 வரை தடை!

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நீலகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கி 14 மாவட்டங்களில் 40 ... மேலும் பார்க்க

அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும்: அண்ணாமலை

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருவதால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு: 3 பேருக்கு சம்மன்; மார்ச் 11-ல் ஆஜராக உத்தரவு

வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில், 3 பேருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா, முத்துகிரு... மேலும் பார்க்க

பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது

தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க