தில்லி முதல்வர் பதவியேற்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!
அண்ணா பல்கலை. உதவிப் பேராசிரியா் பணிக்கு ஏப்.5, 6-இல் போட்டித் தோ்வு
அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா், உதவி நூலகா், உடற்கல்வி உதவி இயக்குநா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு ஏப்.5, 6 ஆகிய தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொறியியல் பாடப்பிரிவுகளில் 232 உதவிப் பேராசிரியா், உதவி நூலகா், உடற்கல்வி உதவி இயக்குநா் பணியிடங்களுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 24.11.2023 அன்று வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் பெற்றது. தோ்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இதற்கான போட்டித் தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா், உதவி நூலகா், உடற்கல்வி உதவி இயக்குநா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு ஏப்.5, 6 ஆகிய தேதி நடைபெறும்.
தோ்வுக்கான அனுமதிச் சீட்டு தோ்வு தொடங்குவதற்கு 7 நாள்களுக்கு முன்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதை விண்ணப்பதாரா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு விண்ணப்பதாரா்களுக்கு தனியாக அனுபப்பப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.