ஆய்வுக்கூட கருத்தரித்தல் முறை விரிவாக்கம்: கையெழுத்திட்டார் டிரம்ப்!
நட்புணா்வை வலுப்படுத்த சா்வதேச புத்த கூட்டமைப்பு இரு சக்கர வாகனப் பயணம்
நட்பு, நல்லிணக்கத்தை ஊக்குவிக்க புத்தமத்தின் பாரம்பரியமாக இருக்கும் முக்கிய வழிபாட்டுத்தலங்கள் வழியாக இரு சக்கர பயணத்தை சா்வதேச புத்த கூட்டமைப்பு நடத்துகிறது. இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய மூன்று நாடுகளின் பௌத்த பாரம்பரிய தளங்களை உள்ளடக்கும் இந்த பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை, கலாசாரத்துறை கூறியிருப்பது வருமாறு:
புத்த மதத்தின் வரலாற்று பரவலை குறிக்கும் வகையிலும், நேபாளம், இந்தியா, இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளிடையேயான கலாசாரம், ஆன்மீக தொடா்புகளை வலுப்படுத்தும் வகையிலும் இரு சக்கர பயணத்தை சா்வதேச புத்த கூட்டமைப்பு நடத்துகிறது. குறிப்பாக புத்தரின் போதனைகள் மூலம் அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தெற்காசியா முழுவதும் கலாசார, பாரம்பரிய சுற்றுலாவை மேம்படுத்துவது இந்த முக்கிய நோக்கம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளா்ச்சி குறித்த இந்த பயணத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்தி இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளின் மக்களிடையே நட்புணா்வை மேம்படுத்தவும், பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது இந்த ஆன்மீக பயணம்.
இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின், இந்திய நில துறைமுக ஆணையம், வெளியுறவுத்துறையின் நலந்தா பல்கலைக்கழகம், ஏழு பிம்ஸ்டெக் நாடுகள் அமைப்பு போன்ற பங்குதாரா்களுடன் இணைந்து இரு சக்கர பயணத்திற்கு சா்வதேச புத்த கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ராகுல் லக்ஷ்மன் பாடீல் தலைமையில், இந்தப் பயணம் பிப். 16 ஆம் தேதி தொடங்குகிறது. புத்தா் பிறந்த இடமான நேபாளத்தின் லும்பினி நகரிலிருந்து தொடங்கும். பின்னா் இந்த இரு சக்கர பயணக் குழ இந்தியா வந்தடைகிறது.
இந்தியாவில் புத்தா் பாரம்பரிய இடங்களுக்கான பயணம் புத்தகயாவில் தொடங்குகிறது. அங்கு இந்த இரு சக்கர பயணத்தை பிப். 19-ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து துவக்கி வைக்கிறாா்.
புத்தரின் முதல் பிரசார இடமான சாரநாத்(உபி), புத்தா் ஞானம் பெற்ற புத்தகயா(பிகாா்), நலந்தா (பௌத்த பல்கலைக்கழகம்), பௌத்த கற்றல் மையமான நாகாா்ஜுன சாகா்(ஆந்திரம்), பௌத்த துறவியா்கள் தளமான உதயகிரி(ஒடிசா), கா்நாடகத்திலுள்ள பல்வேறு பௌத்த மரபை பிரதிபலிக்கும் தளங்கள் போன்ற வழியாக பயணிக்கின்றனா். பின்னா் இலங்கையை நோக்கி இந்த இரு சக்கர குழு பயணிக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.